இன்று முதல் தீப்பெட்டி விலை 2 ரூபாய்… 14 ஆண்டுகளுக்கு பிறகு விலையேற்றம்!

0
Follow on Google News

தமிழகத்தில் தீப்பெட்டிகளின் விலை இன்று முதல் 2 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தீப்பெட்டிகளின் விலை கடந்த 14 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இடையில் விலையேற்றம் இல்லை. ஆனால் தீக்குச்சிகளின் எண்ணிக்கை பெட்டிக்கு 40 என்ற வீதம் குறைக்கபப்ட்டது.

இந்நிலையில் இப்போது தீக்குச்சிகளின் உற்பத்தி பொருட்களான பாஸ்பரஸ் உள்ளிட்டவற்றின் விலை ஏற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் போக்குவரத்து செலவீனங்கள் அதிகமாதல் ஆகியவற்றால் விலையை உயர்த்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து டிசம்பர் 1 ஆம் தேதி (இன்று) முதல் இந்த விலையேற்றம் அமலுக்கு வருகிறது.