சி எஸ் கே அணியில் தோனியை விட ஜடேஜாவுக்கு அதிக தொகை… பின்னணி என்ன?

0
Follow on Google News

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் இணைவதால் போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகி தொடர் 60 நாளுக்கு மேல் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கும் தொடரின் இறுதிப் போட்டி ஜுன் மாதத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது.

அடுத்த ஆண்டு தொடருக்கான மெஹா ஏலம் டிசம்பர் 30 ஆம் தேதி அல்லது ஜனவரி முதல்வாரத்தில் நடக்கலாம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து அணிகள் தங்கள் அணியில் தக்கவைத்துக்கொண்ட வீரர்களின் விவரங்களை வெளியிட்டன. இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ஜடேஜா, மொயின் அலி, ருத்துராஜ் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர், ரெய்னாவுக்குக் கூட வாய்ப்பில்லை.

இந்நிலையில் தக்கவைக்கப்பட்ட வீரர்களில் ஜடேஜா முதல் வீரராக இருப்பதால் அவருக்கு 16 கோடி ரூபாய் அளிக்கப்படும் . அவருக்கு பின் இருக்கும் தோனிக்கு 12 கோடி ரூபாய். தோனியை விட ஜடேஜாவை அதிக தொகை கொடுத்து தக்கவைக்கப் பட்டு இருப்பது குறித்து அதிருப்திகள் எழுந்துள்ளன. ஆனால் அணியின் நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது இந்த முடிவு சரியானதுதான் என்றும் ஜடேஜா வரும் காலங்களில் சி எஸ் கே அணியை வழிநடத்துவார் என்றும் சொல்லப்படுகிறது.