பொய் சொல்லலாம் அதுக்கான ஏக்கர் கணக்கில் பொய் சொல்வதா, என ராகுல் காந்தி பேசிய பொய் தற்பொழுது அவருடைய அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டு வரும் சூழல் உருவாகி உள்ளது. அதாவது பொய் சொன்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா என வரும் சினிமா பட டயலாக் போன்று, பொய் சொன்னாலும் நம்புற மாதிரியாவது ராகுல் காந்தி சொல்லி இருக்க வேண்டும், ஆனால் அதற்கும் ராகுல் காந்திக்கு திறமை இல்லையா.? என்கிற கேள்வி தற்பொழுது இந்தியா முழுவதும் விவாதமாக மாறியுள்ளது.
சமீபத்தில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது சரமாரியாக குற்றசாட்டுகளை முன் வைத்து இருந்தார், அதில் மகாராஷ்டிர தேர்தலில் ஒரு கோடி புது வாக்காளர்கள் எப்படி திடீர்னு வந்தாங்கன்னு கேள்வி எழுப்பியராகுல் காந்தி, லோக்சபா தேர்தல்ல இவ்ளோ வாக்காளர்கள் இல்ல, ஆனா ஐந்து மாசத்துல சட்டசபை தேர்தலுக்கு ஒரு கோடி பேர் வந்துட்டாங்க. மாலை 5:30 மணிக்கு மேல திடீர்னு வாக்கு எண்ணிக்கை ஏறியிருக்கு, ஆனா எங்க ஆளுங்க அங்க அப்படி ஒரு வாக்குப்பதிவு நடக்கவே இல்லைன்னு சொல்றாங்க என்று ராகுல் காந்தி தெரிவித்த குற்றசாட்டு பொய் என அம்பலமாகி உள்ளது.

அதாவது மத்தியில் கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொது வாக்காளர் சேர்க்கை 2004 ஆண்டு 4.7% மற்றும் 2009ம் ஆண்டு 4.1% சதவீதமாக இருந்தது, ஆனால் 2024ம் ஆண்டு 4.4 சதவிகிதம் தான் அதிகரித்துள்ளது. இது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2004ம் ஆண்டு வாக்காளர் சேர்க்கையை விட குறைவான சதவிகிதம் என்பது குறிப்பிடதக்கது.அந்த வகையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடுகையில் புதிய வாக்காளர் சேர்க்கை பாஜக ஆட்சியில் குறைந்த சதவிகிதமே உள்ளது.
மேலும் மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலில் மாலை 5:30 மணிக்கு மேல திடீர்னு வாக்கு எண்ணிக்கை ஏறியிருக்கு என ராகுல் காந்தி குற்றசாட்டுகளை தெரிவித்து இருந்த நிலையில், மாலை 5 மணிக்கு முன்பு வரை 1 மணி நேரத்திற்கு சுமார் 58 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில் மாலை 5மணிக்கு மேல 1 மணி நேரத்திற்கு வெறும் 32.5 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது உறுதியாகி, ராகுல் காந்தி லை 5:30 மணிக்கு மேல திடீர்னு வாக்கு எண்ணிக்கை ஏறியிருக்கு என தெரிவித்த குற்றசாட்டு பொய் என அம்பலமாகி உள்ளது.
இதில் ராகுல்காந்தி இன்னொரு படி மேல போய் தெரிவித்த பொய் தான் நகைப்புக்குரியதாக அமைத்துள்ளது, ‘தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை கொடுக்க மறுக்குது என்றும், CCTV காட்சிகளை அழிக்கப் பார்க்குது, இது பாஜகவோட கூட்டு சதி என ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தேர்தல் வாக்குபதிவின் போது பதிவாகும் CCTV காட்சிகள் 45 நாட்கள் வரை இருக்கும்.
வாக்கு பதிவில் சந்தேகம் இருந்தால், நீதிமன்றம் மூலமாக மனு தாக்கல் செய்து CCTV காட்சிகளை சம்பந்தபட்ட கட்சிகள் பார்க்கலாம், ஆனால் இதுவரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எந்த ஒரு வேட்பாளரும் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்படவில்லை, அப்படியிருக்கையில் வாக்காளர்கள் தனியுரிமை பாதுகாப்பு கருதி CCTV காட்சிகளில் பொது வெளியில் தேர்தல் ஆணையம் எப்படி வழங்க முடியும் என்கிற அடிப்படை கூட ராகுல் காந்திக்கு தெரியவில்லை என கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த தலைமை தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் பட்டியலில் தவறுதலாக சேர்க்கப்பட்ட பெயர்களின் விவரங்கள், தவறுதலாக நீக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய உறுதிமொழி பத்திரத்தில் ராகுல் காந்தி கையெழுத்திட வேண்டும். அதன்பிறகு நாங்கள் சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வாக்காளர் பட்டியல் வெளிப்படையாக தயாரிக்கப்படுகிறது. அந்த பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம். வாக்குகள் திருடப்பட்டது உண்மைதான் என சட்டப்படி உறுதிமொழி பத்திரத்தில் ராகுல் காந்தி கையெழுத்திட்டு தரவேண்டும். அல்லது அபத்தமான குற்றச்சாட்டுகளை கூறிவிட்டேன் என்று இந்த நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த 2 வாய்ப்புகள்தான் ராகுல் காந்திக்கு உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

