புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை…! அஞ்ச மாட்டார்களாம்… மீண்டும் ஆபாச பதிவாளர் ஜெயச்சந்திரன் திமீர் பதிவு..

0
Follow on Google News

திமுகவை சேர்ந்த ஆபாச பதிவாளர் ஜெயச்சந்திரன் தொடர்ந்து சமூக வலைதளத்தில் எதிர்கட்சியில் இருக்கும் பெண் அரசியல் தலைவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் பதிவு செய்து வருகின்றவர். இந்நிலையில் தொடர்ந்து பல்வேறு புகார்கள் ஆபாச பதிவாளர் ஜெயச்சந்திரன் மீது கொடுக்கப்பட்டாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதிமுக ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த தனது ஆபாச பதிவின் போது.

இவரை காவல் துறை கைது செய்ய முயற்சித்த போது, ஆபாச பதிவாளருக்கு ஆதரவாக திமுக எம்பி வரை குரல் கொடுக்க காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்பினார் ஆபாச பதிவாளர் ஜெயச்சந்திரன். இந்நிலையில் தற்போது திமுக ஆட்சியில் எதிர்கட்சியினர், கிஷோர் கே சாமி, சாட்டை துரைமுருகன் மற்றும் கல்யாணராமன் போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர், இதில் கிஷோர் கே சாமி குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும்நிலையில், திமுகவை சேர்ந்த ஆபாச பதிவாளர் ஜெயச்சந்திரன் சமீபத்தில் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் குறித்து பாலியல் ரீதியாக ஆபாசமாக பதிவு செய்திருந்தார் இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஆபாச பதிவாளர் ஜெயச்சந்திரன் மீது காயத்ரி ரகுராம் உட்பட பலர் தரப்பில் இருந்து போலீஸ் புகார் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஆபாச பதிவாளர் ஜெயச்சந்திரன் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக ஐடி பிரிவில் அவர் வகித்த பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கியது திமுக ஐடி பிரிவு தலைமை. இதனை தொடர்ந்து போலீஸ் தரப்பில் இதுவரை ஆபாச பேச்சாளர் கைது செய்யப்படாத நிலையில், சில நாட்கள் சமூக வலைதளத்தில் இருந்து தலைமறைவாக இருந்து வந்த ஆபாச பதிவாளர் ஜெயச்சந்திரன் மீண்டும் தலைகாட்ட தொடங்கியுள்ளார்.

பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் அரசியலில் இருக்கும் பெண்கள் குறித்து பதிவிட்டு வந்த ஆபாச பதிவாளர் ஜெயச்சந்திரன் கைது செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பததால். தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்தில் திமிராக பதிவு செய்து வருகிறார். திமுக தொண்டன் எந்த பொய் வழக்கிற்கும் அஞ்ச மாட்டான் என்றும், நாங்க பரம்பரை திமுக டா, உங்களுடைய உருட்டல் மிரட்டல் என்னிடம் எடுபடாது என்று யாரும் தன்னை ஏதும் செய்யமுடியாது என்கிற தோரணையில் சமூக வலைதளத்தில் ஆபாச பதிவாளர் ஜெயச்சந்திரன் பதிவு செய்துவருவதும் குறிப்பிட தக்கது.

ஐந்து ஆயிரம் கோடி முறைகேடு.. அண்ணாமலை கையில் ஆவணங்கள்.. விழிப்பிதுங்கி நிற்கும் திமுக.