கர்நாடாவுக்கு தப்பி ஓடிய ரஜினி-லதா ஜோடி..! ஓசூரில் மடங்கி பிடித்த எம்ஜிஆர்..! பின் நடந்த கச்சேரி என்ன தெரியுமா.?

0
Follow on Google News

எம்ஜிஆர் உடன் ஜோடியாக நடித்த நடிகை லதா மற்றும் ரஜினிகாந்த் இடையே காதல் இருத்ததாகவும், இது எம்ஜிஆர் அவர்களுக்கு பிடிக்காமல் ராமாவரம் தோட்டத்துக்கு ரஜினிகாந்தை நேரில் அழைத்து எம்ஜிஆர் அடித்ததாக சில தகவல் பல வருடமாக உலா வரும் நிலையில், தற்போது சினிமா துறையை சேர்ந்த பழமையான நடிகர் ஒருவர் ரஜினிகாந்த் – லதா ஜோடிகளுக்கு இடையில் நடந்த சம்பவங்கள் பற்றியும் அதில் எம்ஜிஆர் தலையீடு குறித்தும் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, ரஜினிகாந்த் தனது திருமணத்துக்கு பத்திரிக்கை வைப்பதற்காக எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது, அவருடை அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் அனுமதியுடன் சென்னை மாம்பலத்தில் உள்ள எம்ஜிஆர் அலுவலகத்துக்கு மதியம் ஒரு மணியளவில் ரஜினிகாந்த் சென்றுள்ளார். ஆனால் சுமார் மாலை 4:30 மணி வரை ரஜினிகாந்தை காக்க வைத்து, நேரில் எம்ஜிஆர் வராமல், அவரது உதவியாளர் பத்திரிகையை என்னிடம் கொடுத்துட்டு போங்க என்று அவமானப்படுத்தி அனுப்பியதாக கூறிய அந்த சினிமா பிரபலம்.

இதற்கு முக்கிய காரணம் ரஜினிகாந்த் – நடிகை லதா இடையே இருந்த தொடர்பின் காரணமாக தான் ரஜினிகாந்த் மீது எம்ஜிஆர் அவர்களுக்கு கோபம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், முள்ளும் மலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் ஜோடியாக நடித்தார் நடிகை லதா, இதற்கான படப்பிடிப்பு தொடக்கி லதா சம்பந்தமான காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், இந்த தகவல் எம்ஜிஆர் கவனத்துக்கு சென்றுள்ளது உடனே முக்தா சீனிவாசனை படப்பிடிப்பு தளத்துக்கு அனுப்பியுள்ளார் எம்ஜிஆர்.

முக்தா சீனிவாசன் படத்தின் தயாரிப்பாளரிடம் இந்த படத்தில் நடிகை லதாவுக்கு பதில் வேறு ஒரு நடிகையை வைத்து படத்தை எடுங்கள், லதாவை உடனே சென்னைக்கு அனுப்பி வைக்கு எம்ஜிஆர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்க, அதற்கு 7 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டது பெரும் செலவாகிவிட்டது என தயாரிப்பாளர் தெரிவிக்க, உடனே ஆர்.எம்.வீரப்பனை அழைத்து எம்ஜிஆர் 7 நாட்கள் படப்பிடிப்புக்கான செலவு செய்த பணத்தை கொடுத்து ரஜினிகாந்த் உடன் லதா ஜோடி சேர்வதை தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆனால் தொடர்ந்து ரஜினிகாந்த் – லதா நெருக்கம் அதிகமா ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் அவர்களிடம் இருந்து தப்பிக்க கர்நாடகாவுக்கு ஓட்டம் எடுத்துள்ளனர் இந்த ஜோடி, இந்த தகவல் எம்ஜிஆர் கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து உடனே இந்த ஜோடியை வளைத்து பிடிக்க உத்தரவிட்ட நிலையில், கர்நாடகா – தமிழக எல்லையான ஓசூரில் போலீஸ் துணையுடன் மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் ரஜினிகாந்த்- லதா ஜோடி இருவரும் எம்ஜியாரால் பிரித்து வைக்கப்பட்டதாக அந்த சினிமா துறையை சேர்ந்த பிரபலம் தெரிவித்துள்ளார்.

என்னை மன்னிசிடுங்க ! விஜயகாந்தை நேரில் சந்தித்து கதறி அழுத வடிவேலு.! பிரேமலதா என்ன சொன்னார் தெரியுமா.?