எடப்பாடி பிடிவாதம்… அமித்ஷா கொடுத்த வார்னிங்… செங்கோட்டையன் டெல்லி பயணம் ரகசியம்…

0
Follow on Google News

அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் அனைத்து பொறுப்புகளிலும் நீக்கம் செய்யப்பட்ட பின்பு மன அமைதிக்காக ஹரித்துவார் பயணம் மேற்கொள்கிறேன் என்று விமானத்தில் பறந்த செங்கோட்டையன், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணி வலுவாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ஆனால் அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்த பின்பு, இந்த கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வரவேண்டும் என்று அமித்ஷா எதிர்பார்த்த நிலையில், இந்த கூட்டணியில் இருந்து ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் என ஒவ்வொருவராக வெளியேறி கொண்டிருக்கிறார்கள். மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை தலைமையிலான பாஜக 18 சதவீத வாக்கு வங்கியை நிரூபித்து தன்னுடைய பலத்தை காண்பித்து இருந்தது.

அதே நேரத்தில் அதிமுக ஏழு தொகுதிகளில் டெபாசிட் இழந்திருந்தது, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மெகா கூட்டணி அமைப்பேன் என்று சூலுரைத்த எடப்பாடி தலைமையிலான அதிமுகவிற்கு மன்சூர் அலிகான் கூட வந்து பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி வேண்டாம் என்று கூட்டணிக்கு மறுத்துவிட்டார். அந்த அளவுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிக பரிதாபமான நிலையில் எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணிக்காக கதவுகளை திறந்து வைத்தும் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை.

இதுதான் அதிமுகவின் இன்றைய நிலைமையும் கூட, அந்த வகையில் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதன் காரணமாகவே தான் பாஜகவை நம்பி இந்த கூட்டணிக்கு பல கட்சிகள் இணைந்து இருந்தாலும், எடப்பாடி நடவடிக்கையின் காரணமாக இந்த கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகிறார்கள்.

இந்நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் நிலை இப்படியே தொடர்ந்தால், தேர்தலில் சுமார் 20 கோடி ரூபாய் 30 கோடி ரூபாய் செலவு செய்து போட்டியிடும் வேட்பாளர் தோல்வி அடைவோம் என்று தெரிந்தும் யாரும் போட்டியிட முன்வர வர மாட்டார்கள் குறிப்பாக எங்களுக்கு சீட் வேண்டாம் என்று ஒதுங்கிக் கொள்வார்கள், இதுதான் அதிமுகவின் நிலைமையும் ஆக இருக்கிறது.

அந்த வகையில் செங்கோட்டையனை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக உள்ளே கழக குரல் எழுப்ப தயாராகி வருவதாகவும், குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்து ஏழும் தொகுதிகளில் நாலு தொகுதி தென் மாவட்டத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோர் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது, தென் மாவட்டத்தில் மேலும் அதிமுகவுக்கு பலத்த ஆதி கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக தன்னுடைய இரண்டாவது இடத்தை தக்க வைக்க தான் வரும் சட்டசபை தேர்தலில் போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு அதிமுகவை எடப்பாடி கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் வலுவடைந்த அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைக்க முன்வரவில்லை என்றால் , செங்கோட்டையனை முன்னிறுத்தி அந்த வேலையை அமித்ஷா செய்வார் அதற்கான பயணமாக தான் செங்கோட்டையனின் டெல்லி பயணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.