விசிக மிரட்டலுக்கு அஞ்சாத குஷ்பு..!சொன்னது போன்று திருமாவளவன் சொந்த தொகுதிக்கு கெத்தாக சென்ற குஷ்பு.!

0
Follow on Google News

இந்து மனுதர்ம படி இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று திருமாவளவன் பேசியது இந்து பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனை தொடர்ந்து பாஜக மகளிர் அணி சார்பில் அணைத்து மாவட்டங்களிலும் திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார், இதனை தொடர்ந்து இன்று அணைத்து மாவட்டங்களிலும் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் திருமாவளவன் எம்பியாக உள்ள சிதம்பரம் தொகுதியில் நடிகை குஷ்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பபோவதாக நேற்று அறிவித்தார், இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இந்நிலையில் குஷ்பு சிதம்பரம் தொகுதிக்கு செல்ல காவல் துறை அனுமதி மறுக்க பட்டது, இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் சிதம்பரம் தொகுதிக்குள் முடிந்தால் வந்து பார்.! என குஷ்புவுக்கு சவால் விடுத்தனர்.

இந்நிலையில் சிதம்பரம் தொகுதிக்கு செல்ல குஷ்புவுக்கு காவல் துறை தடை விதித்திருந்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியினரின் சவாலை ஏற்று தடையை மீறி திருமாவளவன் எம்பியாக உள்ள சிதம்பரம் தொகுதிக்கு இன்று கெத்தாக புறப்பட்டு சென்றார், ஆனால் அவர் சிதம்பரம் தொகுதிக்கு செல்வதற்கு முன்பே காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், கைது செய்யப்பட்ட பின் தனது டிவீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, நான் கைது செய்யப்பட்டதை நினைத்து விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த கோழைகள் மகிழ்ச்சி அடைய வேண்டாம், எங்களுடைய சக்தி என்ன என்பது தெரிந்தே தான் எங்களை கைது செய்துள்ளது காவல் துறை என தெரிவித்துள்ளார்.