சேலத்தில், மாட்டு சாணம், வெளக்கமாறுடன் காத்திருந்த இந்து பெண்கள்..! திருமாவளவன் எஸ்கேப் ஆனது எப்படி.?

0
Follow on Google News

இந்து மனுதர்மபடி இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என திருமாவளவன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முழுவதும் உள்ள இந்து பெண்கள் கடுமையாக திருமாவளவனை கண்டித்து வருகின்றனர், சமூக வலைதளத்தில் இந்து பெண்கள் திருமாவளவனை கடுமையாக பேசி வெளியிடும் வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில இன்று ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் திருமாவளவனின் ரகசிய வருகையை ஒட்டி, பாஜகவினர் இந்து பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்கு கருப்புக்கொடி காண்பித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருமாவளவனுடன் வந்த அவருடைய ஆதரவாளர்கள் கருப்பு கொடி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கற்களை வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட பலர் காயம் அடைந்தனர், மேலும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனம் கல் வீச்சு தாக்குதலில் சேதம் அடைந்தது. இந்நிலையில் ஈரோட்டில் நடந்த சம்பவம் தமிழ்நாடும் முழுவதும் பரவியதை தொடர்ந்து, ஈரோட்டில் இருந்து திருமாவளவன் சேலம் வருவதாக தகவல் பரவியது, இதனை தொடர்ந்து சேலம் அருகே மாட்டு சாணத்தை கரைத்தும், பெண்கள் வௌக்குமாறு உடன் காத்திருந்தனர்.

நீண்ட நேரம் காத்திருந்தும் திருமாவளவன் வாகனம் வரவில்லை, இதனை யெடுத்து சேலம் அருகே திருமாவளவன் வருகைக்காக காத்திருந்த மக்களுக்கு திருமாவளவன் சேலம் வழியாக வரவில்லை என்றும், வேறு வழியில் சென்று விட்டதாக தகவல் வந்தது. இதனை தொடர்ந்து திருமாவளவன் வருகைக்கு காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.