தவெக ஆட்சிக்கு வந்து 50 நாள்…. அரசு கருவுலகத்திற்கு வந்த 11 ஆயிரம் கோடி… சைலெண்டா சாதித்த CM விஜய்…

0
Follow on Google News

தமிழக அரசின் திட்டங்களுக்காக ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பல துறைகளில் அந்த நிதியை முழுமையாக பயன்படுத்தாமல், மேலும் அரசு அறிவித்த அந்த திட்டத்தை மக்களுக்கு முழுமையாக சென்றடைய வழிவகை செய்யாமல் இருப்பதால், அந்த குறிப்பிட்ட திட்டத்திற்கு அரசு ஒதுக்கிய நிதி முடங்கி விடுகிறது.

இது அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக வங்கிக் கணக்குகளில் பல ஆயிரம் கோடி முழங்கி கிடந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தமிழக அரசியல் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, நிதித்துறை சார்பில் சிறப்பு பணி குழு ஒன்று இதை சீர் செய்வதற்காக அமைக்கப்பட்டது. இந்த நிதி துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு பணி குழு இது தொடர்பாக முழுமையாக ஆய்வு மேற்கொண்டது.

அந்த ஆய்வின் போது பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கடந்த 2021 நவம்பர் 1ஆம் தேதி முதல் 2025 ஜூன் 24 வரையிலான காலகட்டங்களில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல் சுமார் 11 ஆயிரத்து 526 கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதை கண்டுபிடித்து இருக்கிறது. குறிப்பாக உள்ளாட்சித் துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் பொதுப்பணித்துறை , கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் அதிக அளவு நிதி பயன்படுத்தாமலேயே முடங்கிக் கிடந்ததை இந்த சிறப்பு பணி குழு கண்டுபிடித்து இருக்கிறது.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்கி என்ற நபர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த முழு விவரங்களை பெற்றதால், தற்பொழுது இந்த விவரம் வெளி உலகத்திற்கு வந்திருக்கிறது, அதே நேரத்தில் முடங்கிக் கிடக்கும் அரசின் நிதி ஒரு ரூபாய் கூட மிச்சம் இல்லாமல் மீட்டெடுக்கும் வகையில் செயல்பட்டது நிதித்துறை தரப்பில் அமைக்கப்பட்ட சிறப்பு பணி குழு.

குறிப்பாக மொத்த தொகையும் அரசு கருஉலகத்திற்கு தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள தகவலும் வெளியாகி உள்ளது, தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு முதல்வர் விஜயின் இந்த அதிரடி நடவடிக்கை இனிவரும் காலங்கட்டத்தில் நிதி முடக்கம் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை செய்யும்,

அதே நேரத்தில் அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி உரிய நேரத்தில் பயன்படுத்தப்பட்டு மக்களுக்கு பயனடைச் செய்யும் என்றும், மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தவும் அரசு வருவாய் சரியாக பயன்படுத்தவும் நிதி முடக்கம் ஏற்படாமல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்டுகிறது.

குறிப்பாக விஜய் செய்தியாளரை சந்திக்க மாட்டேன் என்கிறார், மக்களை சந்திக்கவில்லை ஆக்கபூர்வமாக பேசவில்லை , மக்கள் நலன் குறித்து பேசவில்லை என்று எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் விமர்சனம் செய்தாலும் சத்தமே இல்லாமல் செயலில் காட்டி இருக்கிறார் முதல்வர் விஜய் என்பதற்கு தற்பொழுது சுமார் 11,526 கோடி அரசு கருஉவலகத்திற்கு கொண்டு வந்திருக்கும் இந்த செயல் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அந்த வகையில் தற்பொழுது பல பொருளாதார நிபுணர்கள் விஜய் தலைமையிலான தாவேக் அரசின் இந்த செயலுக்காக பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிறுவனங்கள் நிதி வங்கி கணக்குகளில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் முடங்கி கிடந்த 11 ஆயிரத்து 526 கோடி ரூபாயை சிறப்பு பணி குழு அமைத்து உடனே மீட்டு தமிழக அரசின் கருஉலகத்திற்கு கொண்டு வந்து ஆட்சிக்கு வந்த ஐம்பது நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்திருக்கிறார் முதல்வர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here