மலிங்காவை அசிங்கப்படுத்திய ஹர்திக் பாண்டியா… அவமானம் தாங்காமல் பதிலுக்கு மலிங்கா என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடப்பாண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பதவி வகிக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த சூழலில் ஹர்திக் பாண்டியா சீனியர் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமானும் மலிங்காவை அவமதித்த சம்பவம் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த சில வருடங்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா கேப்டன்ஷியில் வழி நடத்தப்பட்டு வந்தது. ஆனால் திடீரென இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனை மாற்றிவிட்டார்கள். அந்த அணியின் நிர்வாகம் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. இது மும்பை அணி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் ரோகித் சர்மா ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர். இவ்வாறு மும்பை அணியின் கேப்டனை மாற்றியதற்கு ரசிகர்கள் ஒரு பக்கம் எதிர்ப்பு தெரிவிக்க மற்றொரு பக்கம் அணியில் இருந்த மற்ற வீரர்களும் ரோகித் சர்மாவை மாற்றியது ஏன் என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அதே சமயம் ஹர்திக் பாண்டியாவின் செயல் மற்றும் நடவடிக்கைகள் அந்த அணியில் உள்ள பயிற்சியாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது கிரிக்கெட் வீரர் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருக்கிறார். மலிங்காவை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜாம்பவான் என்றே கூறலாம். ஏனெனில் அந்த அணி ஐந்து முறை கோப்பை வென்றதற்கு மலிங்காவும் முக்கிய காரணமாவார். அந்த அளவிற்கு மும்பை அணி வீரர்களுக்கு நன்றாக பயிற்சி அளித்து வந்திருக்கிறார். இப்படி மலிங்காவின் பயிற்சியில் ஐந்து கோப்பைகளை தட்டிச் சென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

ஹைதராபாத் அணி 277 ரன்களுடன் அபார வெற்றி பெற்றது.ஹைதராபாத் அணி இவ்வளவு ரண்களை குவித்ததற்கு காரணம் மும்பை அணியின் மோசமான பௌலிங் தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் இப்படியான சூழலில் ந ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்து ஆட்டம் முடிந்த உடன் அணி வீரர்கள் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

அப்போது மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மலிங்கா ஹர்திக் பாண்டியாவை கட்டி அணைக்க முயன்றார். ஆனால் ஹர்திக் பாண்டியா தோல்வி அடைந்த கடுப்பில் மலிங்காவை கண்டு கொள்ளாமல் அவரது கையால் தட்டி விட்டு சென்றார். இது மலிங்காவுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது ..இருப்பினும் அந்த சமயத்தில் அவர் அதை காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் இணைவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயிற்சியாளர் மலிங்காவை மைத்தனத்தில் வைத்தே அசிங்க படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் ஹர்திக் பாண்டியா, பயிற்சியின் போது எப்படியெல்லாம் அவ மரியாதையாக நடத்துவார் என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஒரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது, அந்த அணியின் ஒற்றுமை தான்.

ஆனால் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா சாக வீரர்களிடம் இதுபோல திமிராக நடந்து கொண்டடு வருவது, ஒட்டு மொத்த மும்பை இந்தியன்ஸ் அணியை சீர் குழைத்து விடும் என்பதால், தற்பொழுது ஏற்பட்டுள்ள மும்பை அணியில் உள்ள பிரச்சனைக்கு ஒரே தீர்வு ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது தான் சரியான முடிவு என பலரும் விமர்சித்து வருகின்றனர்.