பைனாகுலரை வைத்து சு.வெங்கடேஷை பங்கம் செய்த டாக்டர் சரவணன்… இருவரில் யாருக்கு வெற்றி.?

0
Follow on Google News

தென் தமிழகத்தின் தலைநகரமாக திகழும் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சு. வெங்கடேசன் போட்டியிடுகிறார். கடந்த 5 வருடம் மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வரும் சு.வெங்கடேசன் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. காரணம், தொகுதிக்கு சொல்லும்படியாக எதுவுமே செய்யவில்லை என்கிற குமுறல் தான்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சு.வெங்கடேசன் ஒரு வலுவான வேட்பாளர் இல்லை என்றாலும் கூட, அப்போதைய தேர்தல் களம் என்பது, மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்கிற பிம்பம் மக்கள் மத்தியில் எதிர்கட்சிகளால் கடியமைக்கப்பட்டிருந்தது, மேலும் 2019 தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் என்கிற பிம்பமும் மேலோங்கி இருந்தது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், தேனி நாடாளுமன்ற தொகுதி தவிர்த்து மற்ற அணைத்து தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது, அப்படி தான், மதுரை நாடாளுமன்ற தொகுதியிலும் கம்யூனிட்ஸ் எம்பி சு.வெங்கடேசன் வெற்றி பெற்றார். ஆனால் வாக்களித்த பின்பு தான் மக்கள் தாங்கள் ஏமார்ந்து சு. வெங்கடேசனுக்கு வாக்களித்து விட்டோம் என வருத்தப்படும் அளவுக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் தற்பொழுது சு.வெங்கடேசன் மீண்டும் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில், அவருக்கு போட்டியாக அதிமுக வேட்பாளராக டாக்டர் சரவணன் களம் இறங்கியுள்ளது, இம்முறை திமுக கூட்டணிக்கு மிக பெரிய சவாலாக அமைத்துள்ளது. காரணம் டாக்டர் சரவணன் இதற்கு மும்பு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதே அந்த மக்களின் மனதில் இடம் பிடிக்கும் வகையில் தன்னுடைய சொந்த செலவில் பல மக்கள் நல திட்டங்களை செய்துள்ளார்.

ஒரு மருத்துவராக மதுரை மக்களுக்கு நன்கு அறியப்பட்ட டாக்டர் சரவணன், மதுரை மற்றும் சுற்று பகுதியில் பல ஏழை எளிய மக்களுக்கு தன்னுடைய மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளித்து வருகின்றவர். பதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு கொடுத்த டாக்டர் சரவணனை அவரால் பலன் அடைந்த மக்கள் இன்றளவும் அவரை கடவுளாக வணக்கும் அளவுக்கு மக்கள் மனதை வென்றவர் டாக்டர் சரவணன்.

இந்நிலையில் மதுரை தேர்தல் களம் என்பது டாக்டர் சரவணன் மற்றும் சு.வெங்கடேஷ் இருவருக்கும் இடையிலான நேரடி போட்டியாக நிலவி வரும் நிலையில், டாக்டர் சரவணன் பிரச்சாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுவதை பார்த்து, திமுக கூட்டணி என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் நிற்கிறது. இந்நிலையில் டாக்டர் சரவணன் பைனாகுலருடன் தேர்தல் பிரச்சார செய்தது மதுரை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பைனாகுலரை வைத்து, மதுரை எம்.பி சு.வெங்கடேசனை கலாய்த்து பிரச்சாரத்தில் பேசிய டாக்டர் சரவணன். மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இங்கு செய்த திட்டங்கள், பணிகள் கண்ணில் தென்படுகிறதா என்று பார்க்க பைனாகுலர் கொண்டு வந்தேன். எங்கேயாவது ஏதாவது அவர் செய்த திட்டங்கள் தென்படுகிறதா என பார்க்கிறேன். ஆனால் அவர் செய்த எதுவுமே என் கண்களுக்கு தெரியவில்லை என டாக்டர் சரவணன் கலாய்த்து பேசினார்.

அப்போது அந்த கூட்டத்தில் இருந்த மக்கள் எங்க தொகுதி எம்பி சு.வெங்கடேசன் எங்கே இருக்கிறார் என்றே கண்ணில் தெரியவில்லை இதில் அவர் செய்த திட்டம் எங்கே கண்ணுக்கு தெரியப்போகுது என கூட்டத்தில் இருந்த மக்கள் பதிலுக்கு கலாய்த்தனர். இப்படி கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் மதுரை பாராளுமன்ற தேர்தல் களத்தில் டாக்டர் சரவணனுக்கான வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருப்பதை பார்க்க முடிகிறது.