கர்ப்பிணி மனைவி – சினேகன் இடையே விரிசல்..! சலித்து விட்டதா சினேகனுக்கு திருமண வாழ்க்கை.?

0
Follow on Google News

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் சினேகன், வித்தியாசமாக எதையாவது செய்து சர்ச்சையில் சிக்கி வருகின்றவர் சினேகன். இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான பாண்டவர் பூமி படத்தில் இடம் பெற்ற “தோழா தோழா” மற்றும் “அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்” பாடல்கள் மூலம் பிரபலமானவர் சினேகன், இதன் பின்பு இயக்குனர் சேரன் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பு சினேகனுக்கு கிடைத்தது.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி படத்தில் கவிஞர் சினேகன் எழுதிய “கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” பாடல் பட்டி தொட்டியெல்லாம் தூள் கிளப்பியது, இதன் பின்பு சினேகன் முக்கிய பாடலாசிரியராக அறியப்பட்டார், ஆனால் தனக்கு கிடைத்த பிரபலம் மூலம் சில விஷயங்களில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார், டைனமிக் திருமணம் என மணப்பெண்ணை திருமண நிகழ்வுக்கு வந்த ஆண்கள் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிப்பது.

மணமகனை திருமணத்துக்கு வந்த பெண்கள் கட்டி பிடித்து வாழ்த்து தெரிவிப்பது என தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான சில விசயங்களில் ஈடுபட்டு தனது பெயரை பஞ்சராக்கி கொண்டார் சினேகன். இந்நிலையில் தற்போது 43 வயதாகும் சினேகன் கடந்த வருடம் தன்னை விட 15 வயது குறைவான தொலைக்காட்சி தொடர் நடிகை கன்னிகா என்பவரை திருமணம் செய்தார். இதனை தொடர்ந்து தற்போது கன்னிகா கர்ப்பிணியாக இருக்கிறார்.

திருமணம் முடிந்து பிரியாமல் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாக சென்ற சினேகன் – கன்னிகா தம்பதியினர் இடையே விரிசல் தொடங்கியுள்ளது. கர்ப்பிணியாக இருக்கும் கன்னிகா அருகில் கணவன் இருக்க வேண்டும், கர்ப்பிணி பெண்ணுக்கு தேவையான உதவிகளை கணவன் சினேகன் அருகில் இருந்து செய்யவேண்டும் என மற்ற பெண்களுக்கு இருக்கும் ஆசையை போன்றே சினேகன் மனைவி கன்னிகாவுக்கு இருந்துள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் சினேகனுக்கு வாய்ப்பு வந்த போது அவரது மனைவி கன்னிகா மறுத்துள்ளார், தற்போது தனக்கு அருகில் நீங்கள் இருக்க வேண்டும், மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் தொலைபேசியில் கூட பேச முடியாது, என தற்போது தான் கர்ப்பிணியாக இருக்கும் இந்த காலத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என கண்ணீர் மல்க சினேகனிடம் மனைவி கேட்டு கொண்டுள்ளார்.

ஆனால் சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் கிடைக்கும் பணம் குறித்து பேசி வாழ்க்கையில் பணம் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி மனைவி கன்னிகாவுக்கு பாடம் எடுத்ததாக கூறப்டுகிறது, மேலும் மனைவி விருப்பத்துக்கு எதிராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் கலந்து கொண்டதை தொடர்ந்து கடும் கோபத்தில் மனைவி இருந்து வரும் நிலையில் சினேகன் – கன்னிகா தம்பதியினர் இடையே விரிசல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.