வித்தியாசமான முறையில் நயன்தாரா- விக்னேஷ்சிவன் குழந்தை பெற்று கொள்ள முடிவு..! என்ன பார்முலா தெரியுமா.?

0
Follow on Google News

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் 7 வருடமாக காதலித்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது, இவர்கள் இருவரின் தரப்பில் இருந்து இதுவரை இன்னும் திருமணம் குறித்து எந்த தகவலும் வரவில்லை,ஆனால் இவர்கள் வித்தியாசமான பார்முலா ஒன்றை பின்பற்றி குழந்தை பெற்று கொள்வது பற்றி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஐயா படத்தில் அறிமுகமான நடிகை நயன்தாரா, முதல் படத்திலே ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருதேன் என்ற ஒரே பாடலில், தமிழகம் முழுவதும் உள்ள பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார், இதன் பின்பு வல்லவன் படத்தில் நடித்த போது நடிகர் சிம்பு காதல் வலையில் விழுந்த நயன்தாரா, அடுத்த சில மாதங்களில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிம்பு உடனான காதலை முறித்து கொண்டார்.

இதன் பின்பு நடிகர் பிரபு தேவாவை இரண்டாவது முறையாக காதல் செய்து, இவர்கள் காதல் திருமணம் வரை சென்ற நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் தடைபெற்று இருவரும் பிரிந்தனர் , இதன் பின்பு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்ததை தொடர்ந்து சினிமாவில் டாப் ஹீரோயினாக வந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலில் விழுந்தார்.

ஒருவருக்கு காதல் எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம் ஆனால் அது காதலாய் வரவேண்டும் என்று சொல்வது போன்று, நயன்தாரா காதலித்த அனைவரையும் உண்மையாக தான் காதலித்துள்ளார், ஆனால், சிம்பு,பிரபு தேவா போன்றார் தான் நயன்தாரவை ஏமாற்றியதாக கூறப்படுகிறது, இந்நிலையில் தற்போது நயன்தாராவுக்கு 37 வயதாகி உள்ள நிலையில் இன்னும் 3 வருடத்தில், அதாவது 40 வயதுக்குள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறுமா என்பது உறுதியாக தெரியவில்லை.

அந்த அளவுக்கு நயன்தாரா சினிமாவில் பிசியாக இருக்கிறார், இந்நிலையில் சமீபத்தில் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா -நிக் ஜான் தம்பதியினர், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டனர், அதே போன்று ஷாருக்கான் – கௌரிகான் தம்பதியினரும் அவர்களின் கடைசி குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்று கொண்டனர், அதே பார்முலாவை பின்பற்றி விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதல் ஜோடிகள் திருமணத்துக்கு பின்பு,

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது, இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட பின்பும் கூட சினிமாவில் நடிக்க திட்டமிட்டுள்ள நயன்தாரா, மேலும் தற்போது துபாய் போன்ற வெளிநாடுகளில் எண்ணெய் கிணறுகளில் முதலீடு செய்து வருகிறார், இந்நிலையில் தொழிலிலும் கவனம் செலுத்த இருப்பதால், வாடகை தாய் மூலம் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடிகள் திருமணத்திற்கு பின்பு குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.