நள்ளிரவில் என்ன வேலை…நக்மாவை பளார் என அறைந்த சரத்குமார்..அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம் என்ன.?

0
Follow on Google News

நடிகர் சரத்குமார் 1984ம் ஆண்டு சாயா என்கிற பெண்ணை திருமணம் செய்தார், இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது.. இதனிடையே 1995ம் ஆண்டு ரகசிய போலீஸ் திரைப்படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்த நக்மா உடன் காதல் கிசு கிசுக்க பட்டர், இதனால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி சாயா உடன் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த சரத்குமார் 1997ம் ஆண்டு தொடர்ந்து நக்மா உடன், அரவிந்தன், ஜானகிராமன் என இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்தார்.

1994ம் ஆண்டு சரத்குமார் நடித்து வெளியான நாட்டாமை படம் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து, முன்னனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்த சரத்குமார் அடுத்த 5 வருடத்தில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வந்தார், இதனை தொடர்ந்த 1997ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தில் இயக்குனரிடம் தனக்கு ஜோடியாக நக்மாவை நடிக்க வைக்க வேண்டும் என அவரே இயக்குனரிடம் வலியுறுத்தி நக்மா உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இதே போன்று ஜானகிராமன் படத்திலும் சரத்குமார் சிபாரிசின் பெயரில் தான் நக்மா கதாநாயகியாக நடித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் பொது இடங்களில் சரத்குமார் – நக்மா ஜோடி ஒன்றாக சுற்றி வந்த நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில் லிவிங் டு கெதர் முறையில் இருவரும் குடும்ப நடத்தி வந்தது குறித்து அப்போது செய்திகள் வெளியானது, இந்நிலையில் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சினிமா வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் திருமணத்துக்கு முன்பே நக்மாவுக்கு பல கட்டுப்பாடுகள் விதித்தார் சரத்குமார், ஆனால் நக்மா எப்போதும் போல் சுதந்திரமாக செயல்பட்டு வந்தார், இந்நிலையில் நக்மாவின் தனி மனித சுதந்திரத்தில் சரத்குமார் தலையிடுவதாக இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது, தொடர்ந்து சின்ன சின்ன சண்டை சச்சரவுகளுடன் சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் நக்மா மீது சந்தேக பார்வையில் பார்க்க தொடங்கியுள்ளார் சரத்குமார்.

இதனை தொடர்ந்து ஒருநாள், நள்ளிரவு நீண்ட நேரமாகியும் நக்மா வீட்டுக்கு வராமல் இருக்க, சரத்குமாரும் காதலி வரும் வரை காத்திருந்தார், நக்மா வீட்டுக்குள் நுழைந்ததும் சரத்குமார் என் தாமதம் என கேட்க இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது, உடனே ஆத்திரம் அடைந்த சரத்குமார் பளார் என நக்மாவை அறைந்துள்ளார், உடனே என்னை அடிக்க நீ யார், நீ என்ன என்னை திருமணம் செய்த கணவரா? என ஆக்ரோஷமாக பதிலளித்த நக்மா.

மேலும் எனக்கு கண்டிஷன் போட உனக்கு என்ன உரிமை இருக்கும், இனி என் மேல் ஒரு அடி விழுந்தால் கூட போலீசில் புகார் செய்வேன் என தெரிவித்து, போதும் சாமி உன் சவகாசம் என அவருடைய பொருட்களை எடுத்து கொண்டு இரவோடு இரவாக வீட்டை காலி செய்துள்ளார் நக்மா, இதனை தொடர்ந்து சரத்குமார் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, நீ எப்படி இனி தமிழ் சினிமாவில் நடிக்கிறாய் பார்க்கிறேன் என நக்மாவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இதன் பின்பு தமிழ் சினிமாவே வேண்டாம் என முழுக்கு போட்டு விட்டு, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மற்றும் போஜ்புரி போன்ற மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த நக்மா இடையில் அஜித் நடிப்பில் வெளியான தீனா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார், மற்றும் சிட்டிசன் திரைப்படத்தில் ஒரு முக்கியம் கதாபாத்திரத்தில் மட்டும் நடித்தார்,தற்போது 46 வயதாகும் நக்மா இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.