உங்களிடம் இருந்தே வெறி நாய் குணம் மெல்ல வெளியில் வரும்.! குருதி புனல் பாணியில் நிதி அமைச்சருக்கு மரித்தாஸ் பதில்.!

0
Follow on Google News

தமிழக நிதி அமைச்சர் சமீப காலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார், இந்நிலையில் சமீபத்தில் இனி ஜாக்கி வாசுதேவ் பற்றி தான் எதுவும் பேச போவதில்லை, தன்னுடைய நிதி துறையில் கவனம் செலுத்த போவதாக தெரிவித்தார்,ஆனால் அடுத்த இரண்டு தினத்தில் பாஜகவை சேர்ந்த H.ராஜா விமர்சனத்துக்கு பதிலளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மிக கடுமையாக H.ராஜா வெறி நாய் என பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல எழுத்தாளர் மரித்தாஸ்,குருதி புனல் திரைப்படத்தில் வரும் ஒரு கட்சியில் வில்லன் நாசரை பார்த்து கமல்ஹாசன் வீரம்னா என்ன என்று தெரியுமா.? பயமே இல்லாத மாதிரி நடிக்கிறது, உன் பயத்தை உன் கண்ணில் பார்த்துட்டேன், அதை மெல்ல, நிதானமா வெளியில் கொண்டு வந்து உனக்கே அறிமுகம் செய்கிறேன், அதில் நான் அனுபவசாலி என கமல்ஹாசன் பேசியிருப்பார்.

அதே பணியில் நிதியமைச்சரை நோக்கி தற்போது மரித்தாஸ், வெறி நாய் குணம் இனி மெல்ல வெளியில் வரும் உங்களிடம் இருந்தே. அதை வெளியில் எடுத்து உங்களுக்கே காட்டுகிறோம் என தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழக நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களே. மக்கள் தங்கள் கையில் இருக்கும் கடைசி சேமிப்பானா தங்க நகைகளை அடமானம் வைத்து கொரோனா மருத்துவம் பார்க்கிறார்கள் ,கடன் வாங்கி உயிரைக் காப்பாற்ற ஓடுகிறார்கள்.

திமுக வாக்குறுதிப் படி: இந்த நகைக் கடன் எல்லாம் எப்போது தள்ளுபடி செய்வீர்? அதில் தனியாரில் மருத்துவம் பார்த்த செலவையும் அரசே ஏற்கும் என்று திமுக கூறியுள்ளது. இதை எப்படி எப்போது அமல்படுத்தப் போகிறீர் என்று நிதி அமைச்சராக வெறி நாய் கடி வைத்தியம் எல்லாம் பேசாமல் நிதனமாகா தெளிவான பதில் கொடுங்கள். இனி நிதி அமைச்சருக்குத் தகுந்த கேள்விகள் தினமும் முன் வைக்கப்படும்.

வெறி நாய்????? நிதி அமைச்சர் உங்கள் பதவிக்கு ஏற்ற பேச்சும் தன்மையும் தணிவும் இல்லை. உண்மையான வெறி நாய் குணம் இனி மெல்ல வெளியில் வரும் உங்களிடம் இருந்தே. அதை வெளியில் எடுத்து உங்களுக்கே காட்டுகிறோம். மக்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயார் ஆகுங்கள். என மரித்தாஸ் தெரிவித்துள்ளார்.