வேதனையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரஜினிகாந்த்..! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது..

0
Follow on Google News

பெயர், புகழ், பணம் என கொடி கட்டி பறந்த ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்துடன் உலக தமிழர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் குடும்ப வாழ்க்கையில் அவர் நினைத்தது போன்று வெற்றியும் பெறவில்லை, மன நிம்மதியையும் பெற முடியவில்லை என கூறப்படுகிறது. ரஜினிகாந்த் திருமணம் செய்த ஆரம்ப கட்டத்தில் இருந்தே அவருக்கு குடும்ப வாழ்கை நிம்மதியை தரவில்லை என கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் தனது மனைவி மீது கொண்ட வெறுப்பினால் விவாகரத்து வரை சென்ற ரஜினிகாந்த் அவருடைய குருநாதர் இயக்குனர் பாலச்சந்தர் அறிவுறுத்தலின் பேரில் தனது இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் கருதி விவாகரத்து முடிவை கைவிட்டு மீண்டும் குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்தார் என்பது வரலாறு. இதனை தொடர்ந்து குடும்பத்தில் நிம்மதி கிடைக்கவில்லை என்பதற்காவே தான் அவர், ஆன்மீகம் என்கிற பாதையை தேர்ந்தெடுத்தார் என கூறப்படுகிறது.

சினிமாவில் பிஸியான நடிகர், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் என வலம் வந்த ரஜினிகாந்த, தனது குடும்பத்தின் முழு பொறுப்பையும் மனைவியிடம் ஒப்படைத்து விட்டார். ஆனால் தனது இரண்டு மகள்களையும் பண திமிரில் நடந்து கொள்வது, விட்டு கொடுத்து போவது கிடையாது, என அதிகாரம் குணம் கொண்டவர்களாகவே தாய் லதா வளர்ந்துள்ளது, இவர்களின் வாழ்க்கையில் அதுவே பிரச்சனையையாக உருவெடுக்க காரணமாக அமைந்துள்ளது.

இளைய மகள் திருமணம் முடிந்து முதல் கணவரை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், இந்த விவகாரம் ரஜினிகாந்துக்கு மன உளைச்சலை கொடுத்தாலும், குடும்ப உறுப்பினர்கள் பேசி அவரை சமாதானம் செய்து வைத்தனர். தற்போது சுமார் 18 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்துள்ளது ரஜினிகாந்தை உச்சக்கட்ட வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சனைக்கு காரணம் முழுக்க முழுக்க மகள் ஐஸ்வர்யா மீது தான் தவறு என முடிவு செய்துள்ள ரஜினி, மேலும் தனது மகளை சரியாக வழிநடத்தாமல் , அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப வளர விட்டது மனைவி லதா என்பதால் அவர் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் ரஜினிகாந்த், இந்த விவாகரத்துக்கு பின்பு வேதனையில் இருந்து வரும் நிலையில் ஒரு கட்டத்தில் தனிமையில் வீட்டில் அமர்ந்து தானாகவே வேதனையில் கண்ணீர் வரும் அளவுக்கு சோகத்தில் இருப்பதாக கூறபடுகிறது.

இதனை தொடர்ந்து மனைவி லதா மற்றும் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் இருக்கும் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா உடன் மட்டும் ஓரளவு பேசுவதால், தொடர்ந்து அப்பாவை சமாதானம் செய்யும் முயற்சியில் சௌந்தர்யா ஈடுபட்டு வரும் நிலையில், இந்த தகவல் அறிந்தவர்கள். பாவம்யா ..நல்ல மனிதர் ரஜினிகாந்த் . யாருக்கும் இந்த நிலைமை வர கூடாது என கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.