சிம்பு பார்முலாவை கையில் எடுத்த ஐஸ்வர்யா..! தனுஷுக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது… என்ன சம்பவம் தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த ஜனவரி 17ம் தேதி நள்ளிரவில் தங்கள் பிரிவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர். இந்த பிரிவுக்கு பின்பு ஐஸ்வர்யா குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை , அப்பா தன் மீது உள்ள கோபம் காரணமாக, மீண்டும் தனுஷ் உடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் தனுஷ் மீண்டும் இணைய சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் ஐஸ்வர்யா தொடர்ந்து மீண்டும் இனைந்து வாழ பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் எப்போது யாரிடமும் பணிந்து செல்ல கூடிய பண்பு இல்லாதவர் ஐஸ்வர்யா என கூறப்படும் நிலையில், தனுஷ் உடன் மீண்டும் இணைந்து வாழ ஒரு கட்டத்தில் தனுஷை சமாதனம் செய்ய எத்தனை வழிகள் இருக்கிறது என தேர்தெடுத்து அனைத்தையும் செயல்படுத்தி கண்ணீர் விட்டும் பேசி பார்த்துள்ளார். தனுஷ் சுதந்திரத்தில் இனி தலையிடமாட்டேன், உன் விருப்பம் போல் இருந்து கொள்ளலாம், மீண்டும் என்னுடன் இணைந்தால் மட்டும் போதும் என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

ஆனால் தனுஷ் சரி பட்டு வருவதாக தெரியவில்லை, அவருடைய முடிவில் உறுதியாக இருப்பதாக கூறபடுகிறது. இந்நிலையில் சிம்பு -ஐஸ்வர்யா காதல் பிரிவுக்கு பின்பு தனது வேதனையை சினிமா மூலம் வெளிப்படுத்தும் விதத்தில், மன்மதன், வல்லவன் என இரண்டு படங்களை சொந்தமாக இயக்கி நடித்த சிலம்பரசன். அந்த படத்தில் தன்னை காதலித்து ஏமாற்றி சென்ற ஐஸ்வர்யாவுக்கு தனது சினிமா மூலம் தக்க பதிலடி தரும் விதத்தில்.

கதாபாத்திரம் அமைத்தும் படம் எடுத்தார். இது அப்போதே சிலம்பரசனின் சொந்த கதை தான் என விமர்சனகள் எழுந்தது. இதே பார்முலாவை ஐஸ்வர்யா தற்போது கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் உடன் மீண்டும் இணையும் முயற்சி தோல்வியை தழுவியதால். கோபத்தின் உச்சிக்கே சென்ற ஐஸ்வர்யா. 18 வருடம் தன்னுடன் வாழ்ந்த தனுஷ்க்கு தக்க பதிலடி கொடுக்கும் வேலையில் தீவிரமாக இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்காக ஒரு திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும். அந்த திரைப்படத்தின் மய்ய கதை, ஒரு பணக்கார வீட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு அந்த பெண்ணின் செல்வாக்கை பயன்படுத்தி தானும் ஒரு உயர்ந்த இடத்துக்கு வந்த பின்பு தன் காதல் மனைவிக்கு துரோகம் செய்கிறார் அந்த கணவர் இதனால் ஏற்படும் பிரச்சனையால், நன்றி மறந்த அந்த கணவர் தனது மனைவியை விட்டு பிரிக்கிறார். இதனால் அந்த மனைவிக்கு ஏற்படும் வேதனையை வெளிப்படுத்தும் விதத்தில்.

புதிய திரைப்படத்துக்கான கதையை தயார் செய்துள்ள ஐஸ்வர்யா அதற்கான வேலைகளையும் விரைவில் தொடங்குவர் என கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் நடந்தாலும் தனுஷ் தற்போது சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருவதால் தற்போது ஐஸ்வர்யா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்பவர்களிடம். படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாக தெரிவித்து இது குறித்து பேசுவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.