நீ யாருடனும் கும்மாளம் போடு….. ப்ளீஸ் என்னை ஏற்று கொள்..கதறும் ஐஸ்வர்யா..! தனுஷ் சொன்ன பதில் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்து சுமார் இரண்டு வாரம் ஆன நிலையில், இவர்கள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிவதாக முடிவு செய்த போது, தனுஷ் சற்று தயங்கினாலும், ஐஸ்வர்யா பிரிவதில் உறுதியாக இருந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த ஜனவரி 17ம் தேதி தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்தனர்.

ஆனால் இந்த தம்பதியினர் பிரிவதாக அறிவித்த பின்பு, தனுஷ்தான் இனி முழு சுதந்திரமாக செயல்படலாம், என நினைத்து மகிழ்ச்சியில் இருப்பதாகவும், ஆனால் ஐஸ்வர்யா எதிர்பாராத பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் கூறபடுகிறது. தனது 18 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொண்ட பின்பு தனக்கான ஒரு புதிய வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம் என்றும், மேலும் தங்கை முதல் கணவரை விவாகரத்து செய்த போன்று அப்பாவை சமாதானம் செய்து விடலாம் என நினைத்த ஐஸ்வர்யா பெரும் சிக்கியுள்ளார்.

ஐஸ்வர்யா – தனுஷ் பிரிவுக்கு பின்பு ரஜினிகாந்த் குடும்பத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து, உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் ரஜினிகாந்த், தனது கோபத்தை மனைவி மீது வெளிப்படுத்தியுள்ளார். மேலும் குடும்ப உறுப்பினர்கள் மீது இதுவரை பேசாமலே இருந்து வருகிறார் ரஜினிகாந்த் என கூறபடுகிறது. இதனை தொடர்ந்து அப்பாவுக்காக மீண்டும் தனுஷ் உடன் இணைவதை தவிர வேறு வழியே இல்லை என உணர்ந்த ஐஸ்வர்யா அதற்கான முயற்சியில் இறங்கினர்.

இந்நிலையில் தொடர்ந்து ஒரு வாரமாக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரையும் மீண்டும் இணைந்து வைக்க இருவருக்கும் நெருக்கமானவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தொடர் தோல்வியை சந்தித்து வருகையில், இதற்கான காரணம் ஐஸ்வர்யா தனது விருப்பத்தை தெரிவித்தாலும், தனுஷ் மீண்டும் இணைவதில் விருப்பம் இல்லாமல் பிரிந்தது பிரிந்தது தான் என நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஓன்று நடைபெற்றது போன்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நேரடியாக தனுஷ் உடன் பேசினால் சரியாகிவிடும் என நேரில் சந்தித்து பேசும் முயற்சியில் இறங்கினர். இதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் ஒரே ஓட்டலில் தனி தனி அறையில் தங்கி இருக்கும் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் தனுஷ் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து தனுஷை சமாதானம் செய்யும் வகையில் ஐஸ்வர்யா பேசி வந்துள்ளார்.

ஆனால் தனுஷ் பிடி கொடுக்காமல் பேச ஒரு கட்டத்தில், நீ யாருடன் வேன்டுமானாலும் , இந்தத் நடிகையுடன் சென்று குடி, கும்மாளம் போடும் நான் எதுவுமே கேட்க மாட்டேன், ப்ளீஸ்..என்னை ஏற்று கொள், இதனால் என்னுடைய வீட்டில் பெரிய பிரச்சனை நடந்து வருகிறது.. நம்ம இருவரும் மீண்டும் இணைந்தால் தான் என் அப்பாவுக்கு எங்கள் மீது உள்ள கோபம் குறையும் என கண்ணீர் விட்டு கெஞ்சியுள்ளார் ஐஸ்வர்யா. ஆனால் தனுஷ் இறுதிவரை பிடி கொடுக்காமல் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.