ரோகினி ஒரு டுபாக்கூர்… மொத்த குடும்பமும் கையும் களவுமாக பிடித்தது…அனல் பறக்கும் சிறகடிக்க ஆசை…

0
Follow on Google News

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களிலும் டிஆர்பில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் இயல்பாக நடிக்கும் வெற்றி வசந்த், மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி பிரியாவின் எளிமையான நடிப்பு, மாமியார் விஜயா மருமகள்களை பாரபட்சமாக நடத்துவது, அதைவிட இயக்குனர், நடிகர் ஆர். சுந்தர்ராஜனின் கிண்டலான நடிப்பு, வெறும் ஏட்டுக்கல்வியைப் படித்துவிட்டு வேலை செய்ய முடியாத சோம்பேறி மனோஜ் கதாபாத்திரம், ஏற்கெனவே நடந்த திருமணத்தையும் ஒரு குழந்தை இருப்பதையும் மறைத்து மனோஜ்ஜை 2வது திருமணம் செய்துகொண்ட ரோகிணி என இந்த கதாபாத்திரங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

தற்போது, சிறகடிக்க ஆசை சீரியலில், மூன்றாவது மருமகள் ஸ்ருதிக்கு தாலி பிரித்துக் கோர்க்கும் ஃபங்ஷன் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதிலும், ஸ்ருதியின் அம்மா முத்துவை அவமானப்படுத்த வேண்டும் என்றே இந்த ஃபங்ஷனை திட்டமிடுகிறார். மாமியார் விஜயா, முதல் மருமகள் ரோகிணிக்கும் தாலி பிரித்துக் கோர்க்கும் ஃபங்ஷன் நடத்த வேண்டும் என்று கூறுகிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பார்லரில் விஜயா ரோகிணியிடம் உங்க அப்பா கிளம்பிட்டாரா? என்று விசாரித்தபடியே உங்க அம்மா இருந்திருந்தால் கண்டிப்பா உன்னை பாக்க வந்திருப்பாங்க. அவங்க தான் அல்பாய்ஸ்லயே போயிட்டாங்களே என்று சொல்ல அதை கேட்டு ரோகிணியின் அம்மா வருத்தப்படுகிறார். ஆனாலும் தன்னுடைய மகளுக்காக பொறுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி போகிறார். அதை தொடர்ந்து மண்டபத்தில் அண்ணாமலை குடும்பத்தினர் மொத்தமாக வந்திருக்கின்றனர்.

மண்டபத்தை பார்த்ததும் பார்வதி இவ்வளவு பெரிய மண்டபம் என்று வியந்து போக அதற்கு விஜயா ஆமா பெரிய இடத்துகாரங்கன்னா சும்மாவா? இப்படித்தான் பண்ணுவாங்க என்று சொல்லிக்கொண்டு ரோகிணியிடம் உங்க அப்பா கிளம்பிட்டாரா என்று கேட்க, அதற்கு ரோகிணி கிளம்பிட்டாரு இன்னும் கொஞ்ச நேரத்துல பிளைட் லேண்ட் ஆகிரும் என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் மண்டபத்திற்கு வருகின்றனர்.

அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா, ஸ்ருதி அப்பா வாசுதேவனிடம் வர்றவங்களை நீங்க வரவேற்கணும். அப்போதான் நம்ம நெனச்சா பிளான் நடக்கும் என்று சொல்ல அவரும் சரி என்று வந்தவர்கள் எல்லோரையும் விசாரிக்கிறார். மறுபக்கத்தில் மீனா முத்துவிடம் எப்படி நாம இங்க வந்ததும் காரை ஆஃப் பண்ணிட்டு போகும்போது ஸ்டார்ட் பண்றோமோ அதுபோல நீங்க வாயை வச்சுட்டு சும்மா இருக்குன்னும். நீங்க எதுக்கும் வாய் பேசவே கூடாது என்று சொல்ல, சரி என்று முத்துவும் வருகிறார்.

அப்போது மண்டபத்திற்குள் வரும்போது வாசுதேவன் மற்றும் அவருடைய மனைவியிடம் முத்து நக்கலாக வணக்கம் சொல்லிக்கொண்டு உள்ளே வருகிறார். அப்போது ஸ்ருதி தன்னை ரெடி பண்ண மீனாவையும் ரூமுக்கு கூப்பிட அவருடைய அம்மா மீனாவை எதற்கு டிஸ்டர்ப் பண்ற என்று அங்கு விருந்தினர்கள் இருக்கும் இடத்தில் உட்கார வைக்கிறார். மீனாவும் முத்துவும் ஒன்றாக பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போது முத்து மௌன விரதம் இருப்பது போல வாயில் கையை வைத்து யாரிடமும் பேசாமல் இருக்கிறார்.

அப்போது சகாதேவன் தன்னுடைய நண்பரை கூப்பிட்டு அண்ணாமலை பக்கத்தில் உட்கார்ந்து அவர் மேல் ஷூ படும் மாதிரி இருக்க சொல்ல, அவரும் அப்படியே செய்கிறார். மறுபக்கத்தில் விஜயா ரோகிணியிடம் சம்மந்தி இன்னும் வரலையா? என்று டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார் அதற்கு ரோகிணி வந்து வடுவார் என்று சமாளித்துக் கொண்டிருக்கிறார். பிறகு ரோகிணி முத்துவை குடிக்க வைத்து அவனுடைய மூடை மாற்றினால் பெரிய பிரச்சனை பண்ணி விடுவான் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.

அண்ணாமலை தன் பக்கத்தில் உட்கார்ந்தவர் கால் தன்மீது படுவதால் வாசுதேவனின் பிளானை புரிந்து கொண்டு அங்கிருந்து எழுந்து வருகிறார். பிறகு அண்ணாமலை நண்பர் பரமு வாசுதேவன் மாறிட்டாரா என்று கேட்க, அதற்கு அண்ணாமலை நாங்க வரும்போது நல்லாதான் வரவேற்பு செஞ்சார். ஆனா அவர் மாறல்ல அப்படியே தான் இருக்கிறார். என்று மண்டபத்தில் நடந்ததை சொல்ல அதற்கு பரமு கோவப்படுகிறார்.

ஆனால் அண்ணாமலை வேண்டாம், நீ கோவப்படாதே, முத்து இருக்கான். இங்க அவன் சண்டை போட்டு விடுவான். அதற்காகத்தான் இந்த சகாதேவன் இப்படி ஒரு வேலை பண்ணிக்கிட்டு இருக்கான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ரூமில் ரோகிணியும் முத்துவை எப்படி மாட்டிவிடலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கும் போது அங்கே மனோஜ் வந்துவிட யாரைப் பற்றி பேசுறீங்க என்று மனோஜ் கேட்க அப்பா பத்தி தான் பேசிட்டு இருக்கோம் என்று இருவரும் சமாளித்து விடுகிறார்கள்.

மறுபக்கத்தில் வாசுதேவனும் அவருடைய மனைவியும் முத்துவை வச்சு பிரச்சனை செய்ய திட்டம் போடுகின்றனர். இந்நிலையில் முத்துவுக்கு போட்ட ஸ்கேட்ச்சில் ரோகினி மாட்டுவது போன்று, கடைசி வரை ரோகிணி பெற்றோர் மலேசியாவில் இருந்து வராமல் இருக்க, ரோகினி செய்யும் பிராடு தனம் கொஞ்சம் கொஞ்சமாக மொத்த குடும்பத்துக்கும் தெரிய வர, அய்யோ மாட்டிக்கிட்டமே என எப்படி விஜய்யாவிடம் சமாளிக்க போகிறார் ரோஹிணி என்பது தான் அத்தடுத்து சிறகடிக்க ஆசையில் அரங்கேற இருக்கிறது என கூறப்படுகிறது.