பொங்கல் அன்று ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் பொன்னியின் செல்வன் படக்குழுவினர்!

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்த படத்தை எம் ஜி ஆர், கமல்ஹாசன் என பலர் எடுக்க முயன்று முடியாமல் போனது. மணிரத்னமே சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி கைவிட்டார்.

இப்போது லைகா நிறுவனத்தோடு இணைந்து தயாரித்து இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், நிழல்கள் ரவி, சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. முதல் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்காக பொங்கல் திருநாளன்று இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளதாம். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.