காலில் விழுந்ததை மறந்து திமிராக இளையராஜா நடந்து கொள்வதா.? என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இசைஞானி இளையராஜா இசையில் இவ்வளவு வல்லமை கொண்டவரோ, அதே அளவு திமிரும் இளையராஜாவுக்கு உண்டு, அறிமுகமான முதல் படம் அன்னக்கிளியில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் மெகா ஹிட் கொடுத்தது. அடுத்த பத்து வருடத்தில் இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா என டைட்டில் இருந்தாலே அந்த படம் ஓடும் என்கிற அளவுக்கு இளையராஜா இசைக்காக படம் பார்க்க வந்த கூட்டம் உண்டு.

இந்நிலையில் எதிர்பாராத உச்சத்தில் அமர்ந்த இளையராஜா ஒரு கட்டத்தில் தான் போடுவது தான் அந்த படத்தின் பாடலுக்கு மெட்டு, தான் போடுவது தான் அந்த படத்தின் பின்னணி இசை என இயக்குனர்களிடம் தன்னுடைய திமிரை காட்ட தொடங்கியுள்ளார், இசையில் திருத்தம் செய்ய இயக்குனர் கோரிக்கை வைத்தால், உடனே இளையராஜாவுக்கு கோவம் வந்து விடும் என கூறப்படும் நிலையில், இதற்கு காரணம் அப்போது தமிழ் சினிமாவில் இளையராஜாவை மிஞ்ச ஆளே இல்லை என்கிற நிலை தமிழ் சினிமாவில் இருந்தது தான்.

இந்நிலையில் இளையராஜாவின் திமிர் காரணமாக அப்போது அவரிடம் ஏற்பட்ட மோதல் காரணமாக மிக பெரிய இயக்குனர்களான கே.பாலச்சந்தர், மற்றும் மணிரத்தினம் ஆகியோர் இளையராஜா உடன் இருந்த நட்பை முறித்து கொண்டனர் அந்த வரிசையில் இயக்குனர் பாரதிராஜாவும் இடம் பெற்றார், இந்நிலையில் இளையராஜாவுக்கு மாற்றாக ஏ.ஆர்.ரகுமானை இசை அமைப்பாளராக களம் இறக்க முடிவு செய்த கே.பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் இருவரும்.

கே.பாலச்சந்தர் தயாரிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரகுமானை அறிமுகம் செய்தனர், முதல் படத்திலே தேசிய விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் அடுத்தடுத்து தன் இசையால் இளையராஜாவை வீழ்த்தி தமிழ் சினிமாவை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார், பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கு சீமையிலே படத்தில் இடம் பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் இசை கிராமிய படங்களுக்கும் இசை அமைக்க முடியும் நிரூபித்தார்.

இந்நிலையில் தற்போது வரை தனது திமிர் மற்றும் ஆணவத்தை சற்றும் குறைத்து கொள்ளாமல் நடந்து கொண்டிருக்கும் இளையராஜா அவருடைய சினிமா ஆரம்பகட்டத்தில் காலில் விழுந்த சம்பவம் ஒன்றை சினிமா துறையை சேர்ந்த முக்கிய பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார், அன்னக்கிளி படத்தில் இளையராஜாவை அறிமுகம் செய்து வைத்தவர் அந்த படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம்,

இந்நிலையில் அன்னக்கிளி படம் வெளியிடப்பட்டு பத்திரிகையாளரை சந்தித்த பஞ்சு அருணாச்சலம், பத்திரிகையாளர் மத்தியில் இளையராஜாவை அறிமுகம் செய்து, இவர்கள் ஆதரவு உனக்கு எப்போது தேவை இவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள் என பஞ்சு அருணாச்சலம் தெரிவிக்க உடனே அங்கே இருந்த பத்திரிகையாளர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டார் இளையராஜா என கூறப்படும் நிலையில், அப்படி தன்னடக்கத்துடன் இருந்த இளையராஜாவா தற்போது ஆணவத்தில் இருப்பது என பலர் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.