தப்பு பண்ணிட்டேன்….ரஜினியின் நிலைமையை நினைத்து கதறி அழும் லதா ரஜினிகாந்த்.! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் பிரிவதற்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடு குறித்து ஐஸ்வர்யா தாயார் லதாவுக்கு ஏற்கனவே தெரியும் என கூறப்படுகிறது, மேலும் இரண்டாவது மகள் சௌந்தர்யா முதல் கணவரை விவாகரத்து பெற்றது, தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருவதர்க்கு தாய் லதாவும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இரண்டு மகள்கள் செய்வது தவறு என்று தெரிந்தும் கூட மகள்களுக்கு குடும்பம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும், கணவனிடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டிய தாய் லதா, மகள்கள் என்ன செய்தாலும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளார், குறிப்பாக தன்னுடைய மகள்களை கேள்வி கேட்கும் உரிமை மருமகன்களுக்கு இருக்க கூடாது, ஆனால் மருமகன்களை கேள்வி கேட்கும் உரிமை மகள்களுக்கு இருக்கு வேண்டும் என்கிற எண்ணம் லதா ரஜினிகாந்துக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இடையே நீண்ட வருடமாக கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், தான் திருமணம் செய்திருக்கும் பெண் இந்தியா பிரபலங்களில் முக்கியமானவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்பதால் தனுஷ் பொறுமையாக மனைவி ஐஸ்வர்யாவிடம் விட்டு கொடுத்து வாழ்ந்து வந்துள்ளார், மாமனார் ரஜினிகாந்த் மீது தனி மரியாதை மருமகன் தனுஷ்க்கு உண்டு என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிவதர்க்கு முன்பு தாய் லதா நினைத்திருந்தால் இருவரிடமும் பேசி மகளுக்கு அறிவுரை வழங்கி இவர்கள் பிரிவதை தடுத்திருக்கலாம், ஆனால் மகளின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்ததின் காரணமாக தான் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர், மேலும் தாய் லதா கொடுக்கும் செல்லம் தான் ஐஸ்வர்யா தன்னிடம் அதிகாரத்துடன் நடந்து கொள்வதாக உணர்ந்து தனுஷ் தொடர்ந்து மன நிம்மதியில்லாமல் இணைந்து வாழ்வதை விட பிரிந்துவிட முடிவு செய்துள்ளார்.

ஆனால் இவர்கள் பிரிவதாக முதலில் முடிவு செய்தது ஐஸ்வர்யா தான் என கூறப்படுகிறது, இந்நிலையில் இவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினரின் இரண்டு குழந்தைகளை நினைத்து மிகுந்த வேதனையில் ரஜினிகாந்த் இருப்பதாக கூறப்படும் நிலையில், எப்போதலாம் இந்த விவகாரம் குறித்து ரஜினிக்கு நினைவுக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மனைவி லதா மீது தான் கோபத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் குழந்தைகளுக்காக ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினரை மீண்டும் இணைக்க லதா எடுத்த முயற்சி தோல்வியை தழுவிய நிலையில், கணவர் ரஜினிகாந்த் வேதனையில் இருப்பதை அறிந்து இரண்டாவது மகள் சௌதர்யாவிடம் தன் மீது தான் தவறு அக்கா ஐஸ்வர்யா – தனுஷ் இருவரையும் பிரிந்து வாழும் முடிவை நான் தலையிட்டு பேசி தடுத்திருக்க வேண்டும் என மனம் விட்டு கதறி அழுது வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.