அவமானப்படுத்திய மணிரத்தினம்… பழிவாங்க களத்தில் இறங்கி நேருக்கு நேராக மோதும் தனுஷ்…

0
Follow on Google News

மணிரத்தினம் இயக்கத்தில் அதிக பொருட்செளவில் எடுக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படம் வருகிற 30-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாவதற்கு முதல் நாள் 29ஆம் தேதி தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது.

இதனால் பொன்னியின் செல்வன் பட தயாரிப்பாளருக்கும் மற்றும் இயக்குனருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. காரணம் எந்த ஒரு படமும் வெளியாகாமல் தனியாக பொன்னியின் செல்வன் படம் வெளியானால், படம் நன்றாக இருக்கிறதோ,? இல்லையோ.? மக்கள் வேறு வழியின்றி ஒரு தடவையாவது பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விடுவார்கள். அதனால் வசூல் ரீதியாக வெற்றி பெற்று விடும்.

ஆனால் ரசிகரின் எதிர்பார்ப்பை பொன்னியின் செல்வன் பூர்த்தி செய்ய தவறினால், அதே நேரத்தில் நானே வருவேன் படம் ஏதோ ஒரு விதத்தில் ரசிகர்களை கவர்ந்து இழுத்து விட்டால், இரண்டு படத்தின் ரிசல்ட் தலைகீழாக மாறிவிடும். இதனால் பொன்னியின் செல்வன் படம் வெளியாகும் அதே தேதியில் மற்ற படங்களை வெளியிடாமல் இருக்க பல தரப்பிலிருந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

இருந்தும் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் படத்தை வெளியிட்டே தீருவேன் என்பதில் தனுஷ் உறுதியாக இருந்ததாகவும், அதனால் தயாரிப்பாளர் தாணுவை பொன்னியின் செல்வன் வெளியாகும் முதல் நாள், நானே வருவேன் படத்தை வெளியிட்ட வற்புறுத்தியுள்ளார் தனுஷ். இந்த நிலையில் தனுஷ் – மணிரத்தினம் இடையே ஏற்கனவே முன்பகை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை மனதில் வைத்து தான் மணிரத்தினத்தை பழிவாங்கும் எண்ணத்தில் பொன்னியின் செல்வன் வெளியாவதற்கு முதல் நாள் நானே ஒருவன் படத்தை வெளியிட ஏற்பாடு செய்துள்ளார் தனுஷ் என்று கூறப்படுகிறது. தனுஷ் ஆரம்ப கட்டத்தில் சுள்ளான் படத்தில் நடித்து கொண்டிருந்த போது, மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படம் நடித்து விட வேண்டும் என்கின்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ள மணிரத்தினம் அலுவலகத்திற்கு பலமுறை நேரில் சென்று வாய்ப்பு கேட்டுள்ளார்.

ஆனால் தனுசுக்கு அமர்வதற்கு முறையான நாற்காலி கொடுக்கவில்லை, குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்காமல், இவரெல்லாம் ஒரு நடிகரா.? என்று தனுஷை அலட்சியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது வளர்ந்த முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் ஒரு காலத்தில் தன்னை அவமானப்படுத்திய மணிரத்தினத்திற்கு தக்க பாடம் புகட்டும் வகையில், அவர் இயக்கத்தில் வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்தின் அதே தேதியில் தன்னுடைய படத்தையும் வெளியிட தனுஷ் முடிவுக்கு இது தான் காரணம் என கூறப்டுகிறது.