இரவில் அந்த விஷயத்தில் கணவர் படு மோசம்… மருத்துவரை அணுகிய மஹாலக்ஷ்மி.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் சீரியல் நடிகைகளுமான மகாலட்சுமி சமீபத்தில் திருப்பதியில் தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே மகாலட்சுமிக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டார். அதேபோன்று ரவீந்திரனும் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து செய்தவர். ஆகையால் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.

இவர்கள் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை விட அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன் அதிகம் உள்ள ரவீந்திரனை நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டது தான். ரவீந்திரன் – மஹாலக்ஷ்மி திருமணம் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது, ஆனால் இதையெல்லாம் இந்த தம்பதியினர் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

சமீப காலமாக அனைத்து ஊடகங்களிலும் மகாலட்சுமி – ரவீந்திரன் தம்பதியினரின் பேட்டி தான் முக்கிய இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் இவர்களின் பேட்டியும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் ஒவ்வொரு மீடியாவும் போட்டி போட்டு கொண்டு ரவீந்திரன் – மஹாலக்ஷ்மி தம்பதியினர் பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

தங்களைப் பற்றி பிறர் எப்படி விமர்சனம் செய்தாலும் அதை கருத்தில் கொள்ளாமல், இவர்களுடைய பேட்டியில் ஒருவரைப் பற்றி ஒருவர் பேசும் போது இருவரும் இவர்களின் காதலில் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது. கணவரின் உடல் பருமனை குறைப்பதற்காக தினமும் மனைவி மஹாலக்ஷ்மி அதிகாலையில் கணவர் ரவீந்திரனை எழுப்பி விட்டு உடற்பயிற்சி செய்ய வலியுறுத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

அதே போன்று மனைவியின் ஆசைக்கிணங்க தன்னுடைய உடலை குறைப்பதற்காக அனைத்து உடற்பயிற்சிகளையும், உணவு கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து வருகிறார் ரவீந்திரன் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் கணவர் ரவீந்திரன் கடுன் டார்ச்சர் தாங்க முடியாமல், இதற்கு தீர்வு காண மருத்துவரை மகாலட்சுமி அணுகியதாக தற்பொழுது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இரவு நேரத்தில் கணவன், மனைவி இருவரும் தூங்கும் போது நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் ஆழ்ந்த உறக்கத்தில் இருவரும் இருக்க ரவீந்திரன் விடும் குறட்டை சத்தம் அவர்கள் இருக்கும் படுக்கையறையவே அலற செய்து விடுகிறது. இதனால் மஹாலக்ஷ்மி தன்னுடைய இரண்டு காதுகளையும் தனது இரண்டு கைகளால் இறுக்கி முட்டிக்கொண்டு தூங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருந்தும் சில மணி நேரம் மட்டும் தான் மகாலக்ஷ்மி தூங்க முடிகிறது.

இதனை தொடர்ந்து இதற்கு தீர்வு காண, மகாலட்சுமி அவருக்கு நெருக்கமான ஒரு பெண் மருத்துவரை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் மருத்துவர் பொதுவாக உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு குறட்டை வருவதை தடுக்க முடியாது, அதனால் இதை உடனே சரி செய்ய முடியாது, ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நாங்கள் சொல்வதை பின்பற்றி வந்தால் சரியாகிவிடும் என்று சில டிப்ஸ்களை மகாலட்சுமிக்கு அந்த பெண் மருத்துவர் கொடுத்துள்ளார்.

மேலும் பொதுவாக கணவரின் குறட்டை சத்தத்தினால் தூக்கத்தை இழக்கும் மனைவிகளுக்கு தாங்கள் கூறும் அறிவுரையை உங்களுக்கும் கூறுகிறோம். அதாவது நள்ளிரவுக்கு மேல் எப்போது உங்களுடைய கணவர் குறட்டை விட ஆரம்பிக்கிறாரோ, அப்போது நீங்கள் பக்கத்து அறையில் சென்று தூங்கிக் கொள்ளுங்கள், உங்கள் கணவர் மட்டும் அவருடைய அறையில் படுத்து கொள்ளட்டும் என தெரிவித்த அந்த பெண் மருத்துவர்.

இதைப் பின்பற்றினால் நீங்கள் எந்த இடையூறும் இல்லாமல் தூங்கலாம், காலப்போக்கில் தாங்கள் கொடுத்த டிப்ஸை பின்பற்றி உங்கள் கணவருக்கு குறட்டை சத்தம் படிப்படியாக குறையும்போது, ஒரே அறையில் உங்கள் கணவருடன் தாங்கிக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் மகாலட்சுமிக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார் என்றும், இந்த நிலையில் மருத்துவர் கொடுத்த தெரிவித்த ஆலோசனையை பின்பற்றி கணவர் ரவீந்திரனின் குறட்டை சத்தம் அதிகரிக்கும் போது பக்கத்து அறையில் சென்று படுத்து கொள்கிறார் மகாலட்சுமி எனக் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.