சினிமாவுக்கு குட் பை சொல்லும் மஹாலக்ஷ்மி… ரவீந்திரன் – மஹாலஷ்மி தம்பதியினர் என்ன செய்ய போகிறார்கள் தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல சீரியல் நடிகை விஜய் மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் இருவரும் சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். மகாலட்சுமி தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருக்கும் பொழுதே அவருக்கென ஒரு இளைஞர் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருந்தார். அந்த வகையில் உடல் பருமம் அதிகம் உள்ள ரவீந்திரனை மகாலட்சுமி திருமணம் செய்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் இவர்களின் திருமணம் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்யப்பட்டது.மேலும் பெரும் கோடீஸ்வரர்ரான ரவீந்திரனிடம் இருக்கும் பணத்திற்காக தான் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்கின்ற ஒரு விமர்சனமும் எழுந்தது. இந்த நிலையில் தற்போது புதிதாக திருமணம் செய்து கொண்ட ரவீந்திரன்-மகாலட்சுமி இருவரும் ஹனிமூன் முடித்துவிட்டு குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.

மேலும் முக்கிய கோவில் திருத்தலங்களுக்கு சென்று இருவரும் வழிபாடு நடத்தி வருகின்றனர், இந்த நிலையில் மகாலட்சுமி திருமணத்திற்கு முன்பே ரவீந்திரனிடம் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அதில் ஏற்கனவே தனக்கு ஒரு குழந்தை உள்ளது, ஆனால் ரவீந்திரநாத் திருமணம் செய்த பின்பு ரவீந்திரனுக்கு ஒரு வாரிசு வேண்டும், ஆகையால் திருமணம் முடிந்த உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்கு சம்மதம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாம் என்கின்ற கண்டிஷன் போட்டுள்ளார் மஹாலக்ஷ்மி, இதற்கு ரவீந்திரன் ஓகே சொன்ன பின்பு தான் தான் இவர்கள் திருமணம் நடந்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது முக்கிய திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் மகாலட்சுமி – ரவீந்திரன் தம்பதியினர், விரைவில் மகாலட்சுமி சினிமா சீரியலுக்கு முழுக்க போட்டுவிட்டு கணவனுடன் குடும்பத்தில் செட்டில் ஆகிறார்.

மஹாலக்ஷ்மி ஒரு குழந்தை பிறந்த பின்பு கணவனுடன் சொந்தமாக சீரியல் தயாரிக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விரைவில் ஒட்டுமொத்த தன்னுடைய சினிமா துறைக்கும் குட் பாய் சொல்லிவிட்டு, ஒரு குழந்தையை பெற்றெடுத்த பின்பு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க முடிவு செய்துள்ளார் மகாலட்சுமி என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.