தொழிலதிபருடன் முத்துமலர் அஜால் குஜால்… கையும் களவுமாக பிடித்து பாலா என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா அவரது மனைவி முத்துமலர் இருவரும் கடந்த மார்ச் மாதம் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் விவாகரத்து பெறுவதற்கு முன்பு சில வருடங்களாகவே பாலா – முத்துமலர் இருவரும் கருத்து வேறுபாடுகளால், ஏற்பட்ட சண்டையினால் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தான் பாலா சினிமாவில் கவனம் செலுத்த முடியமால் தொடர் தோல்வியை சந்தித்து வருவதாக கூறப்பட்டது.

முக்கிய அரசியல் பிரமுகர் மகனுடன் முத்துமலருக்கு கள்ள தொடர்பு இருந்துள்ளது. மேலும் அந்த அரசியல் பிரமுகர் மகனுடன் முத்துமலர், அடிக்கடி டெல்லி சென்று நட்சத்திர ஓட்டலில் தங்குவது. வெளிநாடு சென்று லூட்டி அடிப்பதுமாக இருந்துள்ளார். மனைவியின் தகாத உறவு பற்றி கணவர் பாலாவுக்கு தெரியவந்ததை தொடர்ந்து, பாலா – முத்துமலர் இடையில் ஏற்பட்ட மோதல் தான் இவர்கள் பிரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால் அது மட்டுமின்றி தொழில் அதிபர் ஒருவருடன் பாலா மனைவிக்கு இருந்த கள்ள தொடர்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. இயக்குனர் பாலாவின் நெருங்கிய நண்பர் ரமேஷ் ராஜ். ஆஸ்திரேலியாவின் தொழில் அதிபரான இவர், வெளிநாடுகளில் சுரங்கத் தொழிலுக்கு ஆள் எடுத்து அனுப்பும் பணிகளை செய்து வருகிறார்.நண்பர் பாலா மூலமாக அவரது மனைவி முத்துமலர் அறிமுகம் கிடைத்துள்ளது. இதன் பின்பு ரமேஷ் ராஜ் மற்றும் முத்துமலர் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளார்கள்.

சென்னையில் ரமேஷ் ராஜ் கிளை அலுவலக திறப்புவிழாவில் கலந்து கொண்டு, அந்த அலுவலகத்தை திறந்து வைத்தவர் முத்துமலர். ஏற்கனவே ரமேஷ் ராஜ் – முத்துமலர் இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், பாலாவை விட்டு விவாகரத்து பெற்று முத்துமலர் பிரிந்த பின்பு. இனி நமக்கு எந்த ஒரு தடையும் இல்லை என்பதால் தொழில் அதிபர் ரமேஷ் ராஜ் மற்றும் முத்துமலர் இருவரும் தங்கள் நெருக்கத்தை அதிகரித்து கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொழில் அதிபர் ரமேஷ் ராஜ் உடன் ஒன்றாக சேர்ந்து ஒரே வீட்டில் அஜால் குஜாலாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளார் முத்துமலர். இந்த தகவல் பாலா கவனத்துக்கு சென்றுள்ளது. என்னுடன் நண்பனாக பழகிவிட்டு, எனக்கே துரோகம் செய்துவிட்டு எனது மனைவியை ஆட்டையை போட்டுவிட்டார் என ரமேஷ் ராஜ் மீது செம்ம டென்ஷனில் இருந்துள்ளார் பாலா.

இதனை தொடர்ந்து கடந்த மே 8ம் தேதி சென்னை அடையாறில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரமேஷ் ராஜ் – முத்துமலர் இருவரும் அஜால் குஜாலாக இருக்கும் வீட்டிற்கு தனது ஆட்களை அனுப்பியுள்ளார் பாலா. அங்கே சென்ற இவர்கள் முத்துமலர் உடன் ரமேஷ் ராஜ் இருப்பதை பார்த்து, ரமேஷ் ராஜை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. ரமேஷ் ராஜுக்கு ஆதரவாக அங்கே வந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்த வாட்ச் மேனுக்கு அடி விழுந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான ரமேஷ் ராஜ் புகார் கொடுக்கலாம் என அவருடைய வழக்கறிகரை அழைத்துள்ளார், ஆனால் இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால், எனக்கு தான் மேலும் அசிங்கம் என முத்துமலர் புகார் கொடுக்காமல் ரமேஷ் ராஜை தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் கழித்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் மூலம் தற்பொழுது இந்த தகவல் வெளிவர தொடங்கியுள்ளது.

முக்கிய சினிமா பிரபலம் இந்த தகவலை தற்பொழுது வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை மனதில் வைத்து தான், கன்னியாகுமரியில் வணங்கான் படடப்பிடிப்பில் நடிகர் சூர்யாவிடம் மிக கடுமையாக நடந்து கொண்டார் பாலா என்றும். குடும்ப பிரச்சனையின் காரணமாக அவருடைய வணங்கான் படத்தின் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியமால் குழப்பத்தில் இருக்கிறார் பாலா என்று கூறப்படுவது குறிப்பிடதக்கது.