என் கணவரை ஆட்டைய போட்டுவிட்டார்… மஹாலக்ஷ்மி மீது மனைவி பரபரப்பு புகார்.. என்னாச்சு தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி, கடந்த மாதம் தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிக எளிமையாக திருப்பதியில் நடைபெற்றது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மஹாலக்ஷ்மி – ரவீந்திரன் இருவரும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில், திடீரென திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியினரின் திருமண அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரவீந்திரனின் உடல் பருமனை வைத்து பல்வேறு விமர்சனங்கள் மகாலட்சுமி மீது எழுந்தது. பெரும் கோடீஸ்வரர் ஆன ரவீந்திரனனிடம் இருக்கும் பணத்திற்காக தான் மகாலட்சுமி அவரின் உடல் பருமனை கூட பொருட்படுத்தமால் திருமணம் செய்து கொண்டார் என்கின்ற சர்ச்சையும் கிளம்பியது. இருந்தாலும் தங்களுக்கு எதிராக வரும் சர்ச்சைகளை பொருட்படுத்தாமல் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் கடந்த மூன்று மாதங்களாக அனைத்து மீடியாக்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை ஓரம் கட்டி விட்டு, அனைத்து மீடியாக்களையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டனர் புதுமணத் தம்பதியர்களான மகாலட்சுமி – ரவீந்திரன் ஜோடி. மஹாலக்ஷ்மி அணில் என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டு, ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் கணவர் அணில் என்பவரை விவாகரத்து பெற்று பிரிந்தார்.

முதல் கணவரை விவாகரத்து பெறுவதற்கு முன்பு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, தனது மகன் மற்றும் பெற்றோர் உடன் சென்னை அசோக் நகரில் வாசித்து வந்துள்ளார் மஹாலக்ஷ்மி. ஒரு பக்கம் முதல் கணவரை விவாகரத்து செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த மஹாலக்ஷ்மி, மறுபக்கம் அவருடன் சீரியலில் நடித்த ஏற்கனவே திருமணம் முடிந்த ஒரு நடிகருடன் கள்ள உறவில் இருப்பதாக கிசு கிசுவில் சிக்கினார்.

மகாலட்சுமிக்கு முதல் கணவர் அணில் என்பவருக்கும் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தனது கணவருடன் கள்ள தொடர்பில் மஹாலக்ஷ்மி இருப்பதாக பரபரப்பு குற்றசாட்டுகளை வெளியிட்டார் மகாலக்ஷ்மி உடன் கிசு கிசுவில் சிக்கிய அந்த சீரியல் நடிகர் ஈஸ்வரனின் மனைவி நடிகை ஜெயஸ்ரீ. மேலும் மகாலஷ்மியை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னுடைய கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாகவும் போலீஸில் புகார் அளித்தார் ஜெயஸ்ரீ.

மேலும் அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயஸ்ரீ, தன்னுடைய கணவர் ஈஸ்வரன் உடன் சீரியல் நடிகை மகாலஷ்மி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார், அதே போன்று, மகாலட்சுமியும் ஈஸ்வரனும் கைபேசி மூலம் சாட் செய்த அணைத்து ரெகார்ட்களையும் காட்டினார் ஜெயஸ்ரீ,. இதனை தொடர்ந்து ஜெயஸ்ரீ புகார் அளித்ததை ஒட்டி, திருவான்மியூர் மகளிர் போலீசார், ஈஸ்வரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

போலீஸ் புகார் அளிப்பதற்கு முன்பு ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அப்போது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இதற்கும் மேலும், திருமணம் முடிந்த விவகாரத்து பெறாத சீரியல் நடிகர் ஈஸ்வர் உடன் தொடர்பில் இருந்தால், சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதால் தான் அவரை விட்டு விலகினார் மகாலக்ஷ்மி என்று கூறப்படுகிறது.

அதே போன்று மனைவி அளித்த புகாரில் சிறைக்கு சென்ற ஈஸ்வரன் ஜாமினில் வெளியே வந்த பின்பு, மீண்டும் மஹாலஷ்மியை சந்திக்க முயற்ச்சி செய்துள்ளார், ஆனால் தொடர்ந்து ஈஸ்வரனை சந்திக்காமல் புறக்கணித்து வந்துள்ளார் மகாலக்ஷ்மி. இந்நிலையில் தற்பொழுது ரவீந்திரனை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மகாலக்ஷ்மி செம்ம ஜாலியாக இருந்து வரும் நிலையில், கடந்த காலங்களில், அடுத்தவர் கணவரை ஆட்டைய போட முயன்று பின் மகாலக்ஷ்மி ஜகா வாங்கிய சம்பவம் தற்பொழுது வைரலாகி வருவது குறிப்பிட்டத்தக்கது.