கிடு கிடுவென சம்பளத்தை ஏற்றிய திரிஷா… ஆளே இல்லாத கடையில் எதற்கு டீ ஆற்ற வேண்டும்.!

0
Follow on Google News

நடிகர் திரிஷா சமீப காலமாக மார்க்கெட் இழந்து பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். முன்னணி நடிகையாக இருந்த திரிஷா, ராஜா ராணி படத்தில் மூலம் நயன்தாரா ரீ என்ட்ரி கொடுத்த பின்பு மார்க்கெட் இல்லாமல் சினிமாவில் காணாமல் போனார் திரிஷா. இந்த நிலையில் தற்போது நயன்தாரா திருமணம் செய்து கொண்டுள்ளதால், நயன்தாரா இடத்தை பிடிப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து வருகிறார் திரிஷா.

அந்த வகையில் ராஜா ராணி படம் எப்படி நயன்தாராவுக்கு ரி-என்ட்ரி கொடுத்ததோ, அதேபோன்று பொன்னியின் செல்வன் படமும் தனக்கு ரி-என்ட்ரி படமாக அமையும் என்கின்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தார். மேலும் தற்பொழுது நயன்தாரா திருமணம் செய்து கொண்டதுள்ளதால்,முன்னணியின் நடிகர் ஒருவருடன் ஜோடி சேர்ந்து நடித்த அந்த படம் ஹிட்ட அடித்தால் தன்னுடைய மார்க்கெட்டை மீட்டு எடுத்துவிடலாம் என்கின்ற மாஸ்டர் பிளான் போட்ட திரிஷா.

நடிகர் விஜய் தற்பொழுது நடிக்கும் வாரிசு படத்தை முடித்துவிட்டு அடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க திரிஷா வாய்ப்பு கேட்டு, நடிகர் விஜயை நேரடியாக தொடர்புகொண்டு இந்த படத்தில் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய்யின் சிபாரிசில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் இடம்பெற்றுள்ளார் திரிஷா.

இந்நிலையில் லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த திரிஷா, தற்பொழுது தன்னை அணுகும் தயாரிப்பாளர்களிடம் இரண்டு கோடி வரை சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் பட வாய்ப்பு இல்லை இருந்தாலும் இரண்டு கோடி சம்பளமா.? என்று ஆச்சரியத்துடன் திரிஷாவை நிராகரித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

தற்போது திரிஷா கைவசம் இருந்த பொன்னியின் செல்வன் வெளியாகி உள்ளது. அடுத்த விஜய் ஜோடியாக நடிக்கும் படம் ஒரு படம் திரிஷா கைவசம் உள்ளது, மற்றபடி திரிஷா கைவசம் எந்த படமும் இல்லை, இந்நிலையில் பட வாய்ப்பு இல்லாத திரிஷா கிடுகிடுவென சம்பளம் உயர்த்தியது குறித்து ஆளே இல்லாத கடையில் எதற்கு டீ ஆற்றுகிறார் திரிஷா என்று சினிமா வட்டாரத்தில் நக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.