வைரமுத்து உடன் ஏ.ஆர்.ரகுமான் சகோதரி விவகாரம்… வழக்கு தொடுக்க இருப்பதாக ஏ.ஆர்.ரகுமான் சகோதரி பரபரப்பு..

0
Follow on Google News

பிரபல சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், இவர் தொடர்ந்து தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பற்றிய அந்தரங்கள் விஷயங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இவர் தெரிவிக்கும் கருத்துக்கு எதிராக சம்பந்தப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களைப் பற்றி மேலும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து அவர்களின் இமேஜை டேமேஜ் செய்து விடுவார் பயில்வான் ரங்கநாதன்.

அந்த வகையில் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக நடிகை ராதிகா, கஸ்தூரி, ரேகா நாயர் ஆகியோர் எதிராக கொந்தளித்த போது, அவர்களை பற்றி மேலும் பல தகவலை வெளியிட்டு இழிவு படுத்தினார். இதனால் பயில்வான் ரங்கநாதன் யாரை பற்றி என்ன பேசினாலும், சம்பந்தப்பட்டவர்கள் எதற்கு வம்பு என கண்டும் காணாமல் கடந்து சென்று விடுவார்கள்.

இந்த நிலையில் மணிரத்தினம் , ஏ.ஆர்.ரகுமான் , வைரமுத்து ஆகியோரின் கூட்டணி கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கையில், தற்பொழுது வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து இடம் பெறவில்லை, அவருக்கு பதிலாக புதிய பாடலாசிரியர், பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்ற அணைத்து பாடல்களையும் எடுத்தியுள்ளார்.

இந்நிலையில் பாடல் ஆசிரியர் வைரமுத்து பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெறாதது குறித்து சமீபத்தில் பரபரப்பு தகவலை வெளியிட்டார் பயில்வான் ரங்கநாதர். அதில் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வந்தார். அதற்கு ஆதரவாக பல பெண்களும் வைரமுத்துவால் தாங்களும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளதாக குற்றசாட்டுகளை அடுக்கி கொண்டே சென்றனர்.

அந்த வகையில் ஏ ஆர் ரகுமானின் சகோதரியும் வைரமுத்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளதாக தெரிவித்தார். மேலும் இப்படி ஒரு தகவலை ஏ ஆர் ரகுமான் சகோதரி தெரிவிப்பதற்கு முன்பு நிச்சயம் அவருடைய சகோதரர் ஏ ஆர் ரகுமானிடம் ஆலோசித்து தான் வெளியிட்டு இருப்பார். ஆகையால் ஏ.ஆர்.ரகுமான் சம்மதத்துடன் தான் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டை வெளியிட்டிருப்பர் அவருடைய சகோதரி என தெரிவித்த பயில்வான்.

மேலும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பின்பு வைரமுத்து உடன் ஏ ஆர் ரகுமானுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும், இதனால் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றால், தான் இந்த படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என ஏ.ஆர்.ரகுமான் ரகுமான் தெரிவித்திருப்பார், அதனால் தான் வைரமுத்து பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறவில்லை என தெரிவித்த பயில்வான்.

மேலும் இந்த விவகாரம் குறித்து வைரமுத்துவை நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்து சமாதனம் செய்து இருப்பார் மணிரத்தினம் என தெரிவித்திருந்தார் பயில்வான் ரங்கநாதன். இது மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி கூறுகையில், ரங்கநாதன் ஒரு சாக்கடை என்றும், வைரமுத்து மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்பவர்,என்னிடம் 10 அடி தள்ளி நின்று தான் பேசுவார் என தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான் சகோதரி.

மேலும், என் இசைக்கு பாடலை கூட அவர் செல்போனில் தான் அனுப்புவார், பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து இடம் பெறுவதும், பெறாமல் இருப்பதும் ஏ.ஆர்.ரகுமானின் பிரச்சினை, இதில் என்னை தேவையில்லாமல் தொடர்பு படுத்தி பயில்வான் ரங்கநாதன் பேசியதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போவதாக ஏ ஆர் ரகுமானின் சகோதரி தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.