பிரிந்து செல்கிறது நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி… திருமணமான ஒரே வருடத்தில் என்ன பிரச்சனை தெரியுமா.?

0
Follow on Google News

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணம் முடிந்து ஒரு வருடம் கூட நிறைவேறாத நிலையில், இந்த தம்பதியினர் பிரச்சனை மேல் பிரச்சனையை சந்தித்து, இருவரின் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியை இழந்து வருகின்றனர். நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரின் ஜாதகத்தில் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்ததில் காரணமாக, திருமணத்திற்கு முன்பு பல கோவில்களுக்கு இருவரும் சென்று, ஜோதிடர் அறிவுறுத்தலின் படி பரிகாரம் செய்து தங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சித்தார்கள்.

இந்து முறைப்படி கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி காட்டியதில் இருந்து பல பிரச்சனைகளை இந்த தம்பதியினர் சந்தித்து வருகிறார்கள், துபாயில் பல கோடி முதலீடு செய்துள்ள நயன்தாராவுக்கு சமீப காலமாக தொழில் ரீதியான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார், மேலும் தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துடன் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நயன்தாரா தற்பொழுது சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் சென்று விட்டார்.

திருமணத்திற்கு பின்பு நயன்தாராவுக்கு மட்டுமில்லை விக்னேஷ் சிவனும் இக்கட்டான சூழலில் தற்பொழுது இருந்து வருகிறார், நடிகர் அஜித் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் கடைசி நேரத்தில் கைநழுவி போனது. மேலும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கு வாடகை தாய் மூலம் பிறந்த இரட்டை குழந்தை விவகாரம்,மிக பெரிய பிரச்சனையாக வெடித்து இருவரும் சிறை செல்ல கூட நேரிடும் என்கிற வகையில் அந்த பிரச்சனை மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இப்படி பிரட்சனை மேல் பிரச்சனையை சந்தித்து, சோதனை கட்டத்தில் வாழ்ந்து வரும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணம் நடைபெற்ற தேதியின் கூட்டுத் தொகை 3 வருவதால், அந்த தேதியின் திருமணம் செய்த தம்பதியினருக்கு 50 சதவிகிதம் மட்டுமே வெற்றியைத் தரும் என்றும் மேலும் வியாழக்கிழமை அன்று திருமணம் செய்து கொள்வது என்பது சரியான நாள் இல்லை என ஏற்கனவே பலர் எச்சரித்து இருந்தனர்.

மேலும் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டிய ஜூன் 9 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரை குளிகை நேரம் வருகிறது. அந்த நேரத்தில் எது செய்தாலும் திரும்ப திரும்ப நடைபெறும் என்பது ஜோதிட விதியாகும். வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை புதன்ஹோரை நேரமாகும். அந்த நேரத்தில் திருமணம் நடந்துள்ளது. கௌரி பஞ்சாங்கப்படி பார்த்தால் அந்த நேரம் சோரம் என்று உள்ளது.

மொத்தத்தில் பிரம்மாண்டமாக பார்த்து பார்த்து நடைபெற்ற திருமணத்தில் பலவித குளறுபடி நடந்துள்ளதால், குறிப்பாக குளிகை நேரத்தில் எது செய்தாலும் அது திரும்ப திரும்ப நடைபெறும் என ஜோதிடர்கள் எச்சரித்து இருந்தனர். அந்த வகையில் தற்பொழுது நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் பெரும் இக்கட்டான நிலையில் உள்ளதால், ஜோதிடரை நேரில் அழைத்து தங்கள் இருவரின் ஜாதகத்தை பார்த்துள்ளார்கள்.

இருவரின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர், இருவரும் ஒரே இடத்தில் ஒன்றாக இருந்தால் மேலும் உங்களுக்கு பிரச்சனை தான் ஏற்படும், அதனால் குறிப்பிட்ட காலம் இருவரும் பிரிந்து இருக்க வேண்டும், மீண்டும் இருவரும் இணைவதற்கு முன்பு நல்ல நாள், நேரம் பார்த்து மீண்டும் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்ட வேண்டும் என்றும் ஜோதிடர் ஆலோசனை ஏற்று குறிப்பிட்ட சில காலம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி பிரிந்து வாழ இருப்பதாக தகவல் வெளியகியுள்ளது.

மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்ற போது, விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் அப்போது கூறுகையில், விக்னேஷ் சிவன் பெரியவர்களை கலந்து ஆலோசித்து இந்த திருமண ஏற்பாடுகளை செய்யாதது எனக்கும் எனது மனைவிக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது, மேலும் 9 -10.30 திருமண நேரம் என்பது குளிகை நேரம் , குளிகை நேரத்தில் திருமணம் மற்றும் வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அது திரும்பத் திரும்ப நடைபெறும் என்பது ஐதிகம் என ஏற்கனவே விக்னேஷ் சிவன் பெரியப்பா எச்சரித்தது குறிப்பிடதக்கது.