சிவகுமார் கண்டிஷனை உடைத்தெறிந்த ஜோதிகா… வயதான காலத்தின் மரியாதையில்லை…விரக்தியில் சிவகுமார்..

0
Follow on Google News

நடிகர் அஜித் நடித்த வாலி படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அடுத்து சூர்யா நடிப்பில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முதல் முதலில் ஜோடி சேர்ந்த ஜோதிகா, அடுத்தடுத்து சூர்யாவுடன் ஏற்பட்ட நெருக்கம் அது காக்க காக்க படத்தில் காதலாக மலர்ந்தது. இருவரும் காதலிக்க தொடங்கியபின்பு தொடர்ந்து சூர்யா நடிக்கும் பெரும்பாலான படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார் ஜோதிகா.

ஒரே படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்ததால், தயாரிப்பாளர் செலவில் படப்பிடிப்பு தளம் மற்றும் அவுட்டிங் ஷூட்டிங் என இவர்கள் காதலை வளர்த்து வந்தனர். ஒரு சினிமா நடிகையை தன் மகன் காதலிப்பதை விரும்பவில்லை சிவக்குமார். அதனால் சூர்யா-ஜோதிகா காதலை ஏற்றுக் கொள்ளாத சிவகுமார், தங்கள் சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணைத்தான் சூர்யா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சிவகுமார்.

தந்தை தன்னுடைய காதலை கடுமையாக எதிர்க்கிறார் என்று தெரிந்தும், ஜோதிகாவை திருமணம் செய்வதில் சூர்யாவும் உறுதியாக இருந்தார். அதே நேரத்தில் சிவகுமார் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்வது கிடையாது, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தந்தை சிவகுமார் சம்மதத்திற்காக காத்திருப்பேன், அதுவரை காதலர்களாவே இருப்போம் என காத்திருந்தார் சூர்யா.

இந்த நிலையில் சுமார் நான்கு வருட போராட்டத்திற்கு பின்பு ஒரு வழியாக தந்தை சிவகுமாரை சமாதானம் செய்தார் சூர்யா. ஆனால் சூர்யா- ஜோதிகா திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதற்கு முன்பு சில கண்டிஷனை போட்டார் சிவக்குமார். இந்த கண்டிஷனுக்கெல்லாம் ஓகே என்றால் தான் திருமணத்திற்கு சம்மதிப்பதாக சிவகுமார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதில் முக்கியமான கண்டிஷன் திருமணத்திற்கு பின்பு, குடும்பத்தில் பொறுப்பான மருமகளாக இருக்க வேண்டும். ஆகையால் ஜோதிகா சினிமாவில் நடிக்க கூடாது என்பது சிவகுமாரின் முக்கிய கண்டிஷன். இந்த கண்டிஷனை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஏற்றுக்கொண்ட பின்பு தான் சிவக்குமார் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதன் பின்பு இவர்களின் திருமணத்தை சிவகுமார் முன்னின்று நடத்தினார்.

திருமணத்திற்கு பின்பு மாமனார் சிவகுமார் கண்டிஷனை கடைபிடித்து, சுமார் 9 ஆண்டுகள் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த ஜோதிகா, 2015ம் ஆண்டு 36 வயதினிலே படத்தில் ரீஎ ன்ட்ரி கொடுத்தார். இது சிவக்குமாருக்கு பிடிக்கவில்லை என்றாலும் கணவர் சூர்யா சப்போர்ட்டுடன் களம் இறங்கினார் ஜோதிகா. மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம், அதனால் ஜோதிகா நடிப்பதாக தந்தையை சமாதானம் செய்தார்கள் சூர்யா.

ஆனால் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் ஜோதிகா நடிக்க ஆரம்பித்தார். ஜோதிகா சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த பின்பு பொது நிகழ்ச்சிகளில் ஜோதிகா பேச்சும் பேச்சுகள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. சிவகுமார் ககுடும்பத்தை ஒரு குறிப்பிட்ட தரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இதனால் சிவகுமார் குடும்பத்திற்கு ஜோதிகாவால் மிக பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியது.

மேலும் 2d என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தை கணவருடன் இணைந்து ஜோதிகா கவனித்து வந்தார்.இந்த நிலையில் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே கமிட் ஆனார்கள். இந்த ப்ராஜெக்ட் தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜோதிகா. இந்த நிலையில் வணங்கான் படப்பிடிப்பில் சூர்யா – பாலா இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக படம் பாதியிலே நிற்கிறது.

இதனால் சூர்யா குடும்பத்தில் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அதாவது ஜோதிகா தனக்கு பாலா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக பாலாவின் குணம் அறிந்தே சூர்யாவை சிக்க வைத்துள்ளார். ஆகையால் ஜோதிகா சினிமாவில் நடிக்க தொடங்கியது முதல் பிரச்சனை மேல் பிரச்சனை தான் என சிவகுமார் கொந்தளிக்க, வணங்கான் படத்தில் இருந்து ஜோதிகா விலகினார், மேலும் 2டி நிறுவனத்தில் இருந்தும் ஜோதிகா பெயர் நீக்கப்பட்டது.

இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஜோதிகா என்று கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது பொறுத்தது போதும், தன்னுடைய சுதந்திரத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்றும் மாமனாரை பொருட்படுத்தாமல், தற்போது கண்ட நாள் முதல் படத்தின் இயக்குனர் இயக்கும் ஒரு படம்., பொன் பார்த்திபன் மாஸ்டர் படத்தின் திரைக்கதை எழுதியவர் உடன் ஒரு படத்திலும் நடிக்க ஜோதிகா கமிட்டாகி உள்ளார்.

கணவர் சூர்யா சம்மதத்துடன் மீண்டும் சினிமாவில் நடிக்கும் முடிவை ஜோதிகா எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில். தன்னுடைய பேச்சுக்கு இந்த வீட்டில் மரியாதை இல்லை என்கிற கடும் விரக்தியில் சிவகுமார் இருந்து வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.