நீ என் படத்தில் நடிக்கவே வேண்டாம்.. சிம்புவை தூக்கி எறிந்த தயாரிப்பாளர்.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாநாடு படத்திற்கு முன்பு, சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் காணாமல் போயிருந்தார் சிலம்பரசன். பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கிய சிம்புவின் உடன் பருமனும் அதிகரித்தது. மாநாடு திரைப்படத்திற்கு முன்பு அவர் நடித்த திரைப்படங்களில் குறித்த நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவது கிடையாது.

இதனால் சிலம்பரசனை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும் சிலம்பரசனை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி தந்தது. தெரியாமல் வந்து சிக்கி விட்டோம், இந்த படத்தை எடுத்து முடித்துவிட்டு தப்பித்தால் போதும் என்கிற மனநிலையில் இருந்தனர் சிம்பு நடிக்கும் படத்தின் இயக்குனர்கள்.இதனால் சிலம்பரசனை வைத்து படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தவிர்த்து வந்தனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. மாநாடு திரைப்படத்திற்கு முன்பு சிம்புவின் சம்பளம் 6 கோடி என இருந்தது. மேலும் சிம்புவுக்கு மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு, பட வாய்ப்புகள் இல்லாததால், மிக குறைந்த சம்பளத்திற்கு தன்னுடைய தயாரிப்பில் சிம்புக்கு தொடர்ந்து மூன்று படங்கள் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேசன்.

மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு ஐசரி கணேசன் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே மாநாடு படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த நிலையில் மாநாடு படம் வெளியான பின்பு வெந்து திணிந்தது காடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அடுத்தடுத்து ஐசரி கணேசன் தயாரிப்பில் ஏற்கனவே பேசிய அதே சம்பளத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துவிட்டார் சிம்பு.

மாநாடு படம் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை உயர்த்திய சிம்பு, ஏற்கனவே குறைந்த சம்பளத்துக்கு ஒப்பந்தமான படங்களில் இருந்து வெளியேறினார். சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு படம் மிக பெரிய வெற்றியை தொடர்ந்து, அவருடைய நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சிம்புவின் கேரியரில் இதை விட ஒரு கேவலமான படம் இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு படும் மோசமாக இருந்தது.

வெந்து தணிந்தது காடு திரைப்படம் படுதோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு தியேட்டர் ரிலீஸ்யில் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது. ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே சேட்டிலைட் ரைட்ஸ், ஒடிடி நிறுவனத்திற்கு நல்ல விலைக்கு விற்று விட்டார் ஐசரி கணேசன், ஆனால் படம் வெளியான பின்பு வந்த ரிசல்ட்டை பார்த்த பின்பு, அவசரப்பட்டு இந்த படத்தை வாங்கிவிட்டோம் என வருத்தத்தில் இருக்கிறது வெந்து தணிந்தது காடு படத்தை விலைக்கு வாங்கிய ஒடிடி நிறுவனம்.

இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படம், மிகப்பெரிய ஹிட் அடித்தது என்று ஒரு போலியான விளம்பரம் செய்து, நடிகர் சிம்புவுக்கு விலை உயர்ந்த காரும், அந்தப் படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு டூவீலரும், மேலும் வெந்து தணிந்தது காடு படத்தை அதிக அளவில் புரமோஷன் செய்த கூல் சுரேஷுக்கு ஐ போனும் பரிசளித்து பரிசளித்தார் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன்.

இந்த நிலையில் சமீபத்தில் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் சிம்புவை சந்தித்து புதிய படம் ஒன்றில் நடிக்க கால்ஷீட் கேட்டுள்ளார். அதற்கு சிம்பு 35 கோடி சம்பளம் கேட்க அந்தத் தயாரிப்பாளர், ஒரே ஓட்டமாக நீ என் படத்தில் நடிக்கவே வேண்டாம் என்று தெரிவித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மாநாடு வெற்றி அதனை தொடர்ந்து வெந்து தனித்தது காடு வெற்றி பெற்றதாக கார் பரிசளித்து போலி பிம்பத்தை உருவாக்கி தன்னுடைய சம்பளத்தை ஏற்றிய சிம்புவை தயாரிப்பாளர் நம்புவதாக இல்லை என்றும், அதனால் தான் சிம்பு சம்பளத்தை கேட்டு,தயாரிப்பாளர்கள் ஓட்டம் எடுக்கிறார்கள் என கூறப்படுகிறது.