நான் யார் கூட இருந்தா அவருக்கென்ன… பாலாவை வெளுத்து வாங்கிய மனைவி முத்துமலர்.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா- முத்துமலர் தம்பதியினர், கடந்த மார்ச் மாதம் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களின் விவாகரத்து வழக்கு வெளியில் தெரியாதவாறு மிக ரகசியமாக நடந்து வந்த நிலையில், இந்த தம்பதியினர் சட்டப்படி விவாகரத்து பெறுகிறார் என்கின்ற தகவல் சினிமா துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பாலா-முத்துமலர் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிவதற்கு முன்பு சுமார் நான்கு வருடங்களாக இருவரும் ஏற்பட்ட உச்சகட்ட மோதலின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. பாலா கஞ்சா புகைப்பது, மது அருந்தும் பழக்கம் என போதைக்கு அடிமையாகி பல நாட்கள் அலுவலகத்தில் போதையில் பாலா படுத்து விடுவார் என்றும், நள்ளிரவில் முத்துமலர் அலுவலகம் சென்று கணவரை அழைத்து வருவார் என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஒரு கட்டத்தில் பாலாவை வெறுக்க தொடங்கிய முத்துமலர், அவருடைய சொந்த மாவட்டத்தில் கல்லூரியில் படிக்கும் போது நண்பராக இருந்த பிரபல அரசியல் கட்சியின் முக்கிய தலைவரின் மகனுடன், காலங்கள் கடந்து பழக ஆரம்பித்துள்ளார், இவர்களின் நெருக்கம் அதிகரிக்க, அது கள்ள காதலாக உருவெடுத்து, இருவரும் அடிக்கடி டெல்லி மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று அஜால் குஜாலாக இருந்து வந்துள்ளனர்.

மனைவி முத்துமலர் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் மகனுடன் தொடர்பில் இருக்கும் தகவல் கணவர் பாலாவுக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மனைவி முத்துமலர் – பாலா இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பாலாவுடன் இணைந்து வாழ தனக்கு விருப்பமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு பாலாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் முத்துமலர்.

இதன்பின்பு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் ஒரு தொழில் அதிபருடன் ஒரே வீட்டில் முத்துமலர் வசித்து வந்த தகவல் பாலாவுக்கு தெரிய வந்துள்ளது. அந்த தொழிலதிபர் பாலாவின் நெருங்கிய நண்பர் என்றும், அவர் பெயர் ரமேஷ் ராஜ் என்றும், வெளிநாடுகளில் சுரங்க வேலைக்கு ஆட்களை எடுக்கும் வேலையை செய்து வருகின்றவர் ரமேஷ் ராஜ்.

பாலாவும் அவருடைய மனைவியும் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் பாலா மூலம் அவருடைய மனைவி முத்துமலர் தொழிலதிபர் ரமேஷ் ராஜுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்த நிலையில் பாலாவை விட்டு சட்டப்படி விவாகரத்து பெற்று முத்து மலர் பிரிந்த பின்பு, ரமேஷ் ராஜ் உடன் தொடர்பை ஏற்படுத்தி மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். முத்துமலர் – ரமேஷ் ராஜ் பழக்கம் அடையாறில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

இந்த தகவலை அறிந்த பாலா, அடையாறில் முத்துமலர் – ரமேஷ் ராஜ் இருக்கும் வீட்டிற்கு தனது ஆட்களை அனுப்பி தகராறு செய்ய வைத்துள்ளார் பாலா, மேலும் ரமேஷ் ராஜை சரமாரியாக தாக்கியும் உள்ளதாக முக்கிய சினிமா பிரபலம் ஒருவர் சமீபத்தில் இந்த தகவலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் . இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில், அடையாறில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தகராறு உண்மை தான் என்று கூறப்படுகிறது.

மேலும், முத்துமலர் – ரமேஷ் ராஜ் இருவரும் ஒரே வீட்டில் இருந்து வந்த நிலையில், பாலாவின் ஆட்கள் வந்து தகராறு செய்த போது, அவர்களிடம் முத்துமலர், நான் யாருடன் இருந்தால் அவருக்கு என்ன.? அதான் அவரை சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டேன், இன்னும் என்னை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என பாலா அனுப்பிய ஆட்களிடம் கோபத்துடன் பேசியதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.