நடிகை காயத்ரிக்கு துபாயில் ரூம் போட்டது யார்… குட்டையை கிளப்பிய முக்கிய பிரபலம்..

0
Follow on Google News

பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட்ட காயத்ரி ரகுராம் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலையின் முழு நேர எதிர்ப்பாளராக மாறியுள்ளவர். விமர்சனம் என்கிற பெயரில் அண்ணாமலை மீது சேற்றை வாரி இறைத்து வருகிறார். ஆனால் காயத்ரி ரகுராம் பெயரை கூட எந்த ஒரு இடத்திலும் உச்சரிக்க விரும்பாத அண்ணாமலையை சாக்கடையில் கல் வீசினால் அது நம் மீதும் பட்டுவிடும் என்கிற எண்ணத்தில் கடந்து செல்கிறார் என்கின்றது பாஜக வட்டாரங்கள்.

இந்நிலையில் தொடர்ந்து அண்ணாமலையை விமர்சனம் செய்து வந்த காயத்ரியின் ஒவ்வொரு விமர்சனத்துக்கு திருச்சி சூர்யாவின் பதிலடி கொடுத்து வருவது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது மட்டுமில்லை, அண்ணாமலை குறித்து காயத்ரி எதாவது ஒரு விமர்சனம் செய்தால், அடுத்து திருச்சி சூர்யா என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்கிற ஆர்வத்தில் வலைதள வாசிகளின் பார்வை திருச்சி சூர்யாவை நோக்கி காத்திருக்கிறது.

அந்த வகையில் தேஜஸ்வி சூரியவை போட்டு கொடுத்த அண்ணாமலை என காயத்ரி விமர்சனம் செய்ய, அதற்கு திருச்சி சூர்யா, அதைவிடு துபாய்ல உனக்கு யாரு ரூம் போட்டு கொடுத்தா நீ எங்கேயோ ரூம் போட்டுட்டு யாரையோ வந்து நீ போட்டதற்கு காசு கொடுக்க சொன்னாயாமே உண்மையா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார் திருச்சி சூர்யா.

மேலும் அண்ணாமலைக்கு ஒரு குறும்படம் காண்பிக்க வேண்டும் என காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்ய அதற்கு திருச்சி சூர்யா. அதை பிக் பாஸில் ஜெயித்தவர் சொல்லலாம் பிக் பாஸில் காரி துப்பப்பட்டு வெளியில் அனுப்பப்பட்ட நீ சொல்லலாமா. அவரைப் பற்றி ஆயிரம் குறும்படம் வந்தாலும் உன் துபாய் படத்திற்கு எதுவுமே ஈடு கொடுக்க முடியாது காயத்ரி என காயத்ரி ரகுராம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அசிங்கப்பட்டு, அவமானப்பட்ட காயத்ரி ரகுராம் வீடியோக்களை குறும்படமாக தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திருச்சி சூர்யா.

மேலும் காயத்ரி ரகுராம், ஏன் கண்ணா சிரித்த முகத்துடன் எனக்கு வாழ்த்த வேண்டாமா? என அண்ணாமலை பேட்டியை விமர்சனம் செய்ய, அதற்கு திருச்சி சூர்யா, பைத்தியம் என்றால் அவருக்கு மட்டுமல்ல எல்லாத்துக்கும் கொஞ்சம் பயமா தான் இருக்கும்.சிரிச்சுகிட்டே வேற வாழ்த்தணுமாம் உன் மூஞ்சிக்கு இதுவே ஜாஸ்தி. அண்ணா உனக்கு தப்பா வாழ்த்து சொல்லிட்டாரு இப்பயாச்சும் நல்ல மனநல மருத்துவரை பார்த்து நல்லா இருக்கட்டும்னு சொல்லி இருக்கணும் என திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து , வார்ரூம் என்பது அண்ணாமலையை பெருமை பீத்தல் மகிழ்விப்பது மட்டும்தான் என காயத்ரி விமர்சனம் செய்ய, அதற்கு திருச்சி சூர்யா, உனக்கு வார்ரும் நாளும் பிரச்சனை துபாய் ரூம் நாளும் பிரச்சனை. வார்ரும் பத்தி இவ்வளவு அழகா சொல்றியே அப்படியே அந்த துபாய் ரூம் பத்தி தெளிவா சொன்னா தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம் மாமி. என தெரிவித்தவர் நீ நடித்த படத்திலேயே உனக்கு அதிக பெயர் வாங்கி கொடுத்தது துபாய் படம் மட்டுமே எனவே இன்று முதல் எல்லோராலும் நீ துபாய் காயத்ரி என்று அன்போடு அழைக்கப்படுவாய் என திருச்சி சூர்யா பதிலடி கொடுத்ததை தொடர்ந்து, பலர் சமூக வலைதளத்தில் காயத்ரி ரகுராமை துபாய் காயத்ரி என்று அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.