கடும் கோபத்தில் விஜய் – லோகேஷ் கனகராஜ்.. யார் இந்த வேலையை செய்தது.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், பிகில், பைரவா போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல், தொடர் சரிவை சந்தித்தது வந்த நடிகர் விஜய்க்கு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. மாஸ்டரை தொடர்ந்து விஜய் நடிப்பில் தற்பொழுது வெளியாகி உள்ள வாரிசு திரைப்படம் விஜய் ரசிகர்களை மட்டுமின்றி இன்றைய இளம் தலைமுறையினரை மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அடையச் செய்தது.

இருந்தாலும் இந்த படம் மெகா சீரியல் போல் உள்ளது என்கின்ற விமர்சனத்தினால் சீரியல் விரும்பும் பெண்கள் பெருமளவில் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க முன் வந்ததால், வாரிசு திரைப்படம் மிகப்பெரிய நஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொண்டது. இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஆக்சன் படம் கொடுக்க விரும்பிய நடிகர் விஜய், தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய் தவிர்த்து யார் யார் நடிக்கிறார்கள் மற்றும் படத்தில் எடுக்கப்பட்டு வரும் காட்சிகள், படத்தின் கதை என எந்த ஒரு சூழலிலும் கசிந்து விடக் கூடாது என்பதற்காக மிக கவனத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜய் படத்தின் கதை என்னவென்று தற்பொழுது கசிந்துள்ளது.

நடிகர் விஜய் ஒரு ரெஸ்ட்ரோ பார் நடத்தி வருகிறார் அவருக்கு ஒரு மகள் உள்ளது. அவருடைய மகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகிறார். இதனை தொடர்ந்து மகளுக்கு நீதி கேட்டு தன்னுடைய மகளை பாலியல் தொந்தரவு செய்தவர்களை பழி தீர்க்கிறார் நடிகர் விஜய். அது மட்டுமின்றி தன்னுடைய மகள் போன்று வேறு யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த குற்றத்தில் ஈடுபடுகின்ற்றவர்களை அடித்து துவம்சம் செய்கிறார்.

இந்த படத்தில் ஏழு வில்லன்கள் நடிப்பதாக தகவல் வெளியாகிறது, அதில் சஞ்சய்தத், அர்ஜுன், மிஷ்கின் ஆகியோரும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். மிஸ்கின் இந்த படத்தில் விஜய் நடத்தும் ரெஸ்டாரண்டில் வேலை செய்வது வில்லனாக பின்பு எப்படி மாறுகின்றார் என்பது கதையின் மிகப்பெரிய ட்யூஸ்ட் ஆக உள்ளது.

இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் காட்சிகளை வைத்து படத்தின் கதையை சினிமாத்துறையினர் கெஸ் செய்துவிட்டு, இதனை தொடர்ந்து இப்படி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தை கட்டுப்பாடுகளுடன் எடுக்கப்பட்டு வந்தாலும், படத்தின் கதை மற்றும் காட்சிகள் லீக் அவுட் ஆவது, நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருக்கு மிக பெரிய கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது