தப்பு மேல் தப்பு செய்யும் விஜய்.. வரட்டும் ஒரு கை பார்த்து விடுகிறேன் சவாலுடன் காத்திருக்கும் முக்கிய புள்ளி..

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து திரையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க முக்கிய காரணம், உதயநிதி உடன் நடிகர் விஜய்க்கு இருந்த ஈகோ காரணமாக வாரிசு படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் க்கு கொடுக்க கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தது தான் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நம்பர் 1 நடிகர் விஜய் தான் என என வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதற்கு திருப்பூர் சுப்பிரமணியம் பதிலடி கொடுக்கும் வகையில் அஜித் விஜய் ஆகிய இரண்டு நடிகர்களின் படங்களும் நன்றாக வசூல் பெரும், ஆனாலும் அஜித் விஜய் ஆகிய இருவருமே நண்பர் நடிகர் இல்லை என்றும் கதை தான் நம்பர் ஒன் என பதிலடி கொடுத்து விஜய்யின் கோபத்திற்கு ஆளானார் திருப்பூர் சுப்பிரமணியன்.

இதனை தொடர்ந்து வாரிசு படம் வெளியாகி 7 நாட்களில் உலகளவில் ரூ.210 கோடிக்கு மேல் வசூல் சாதனை பெற்றுள்ளது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு பதிலடி தரும் விதத்தில் திருப்பூர் சுப்பிரமணியன், வாரிசு படம் இந்த அளவுக்கு வசூலிக்க வாய்ப்பே இல்லை என தெரிவித்தவர்.முழுமையான வசூல் நிலவரம் தெரிய சில நாட்கள் ஆகும் என கூறியுள்ளார்.

மேலும் , அஜித் நடித்த துணிவு படம் நன்றாக ஓடி வருவதால் வாரிசு படம் ரூ.210 கோடி வசூலித்திருக்க 200 சதவீதம் வாய்ப்பே இல்லை என அடித்து கூறிய திருப்பூர் சுப்ரமணியம், மேலும் இன்று 210 கோடி என்று சொல்வார்கள், நாளை 300 கோடி என்று சொல்வார்கள். இப்படி சொல்லிக்கொண்டே தான் செல்வார்கள். விளம்பரத்துக்காக இதுபோன்று ஆதாரமற்ற கலெக்‌ஷன்களை வெளியிடுவதனால் தான் ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை கோடி கோடியாக உயர்த்திக் கொண்டே இருப்பதாக நடிகர் விஜய்யை மறைமுகமாக வெளுத்து வாங்கி இருந்தார் திருப்பூர் சுப்பிரமணியன்.

இந்நிலையில் திருப்பூர் சுப்பிரமணியன் தொடர்ந்து விஜய்யை கார்னர் செய்து பேசி வருவதால், கடும் கோபம் அடைந்துள்ள நடிகர் விஜய், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தான் நடிக்கும் புதிய படத்தை எந்த ஒரு சூழலிலும் திருப்பூர் சுப்பிரமணியன் திரையரங்குக்கு விற்பனை செய்ய கூடாது என தயாரிப்பாளர் லலில்திடன் விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த திருப்பூர் சுப்பிரமணியன், திருப்பூரில் தன்னுடைய கட்டுப்பாட்டில் 40க்கு மேற்பட்ட டிரையரங்குகள் உள்ளது, என்னை பகைத்துக்கு கொண்டு விஜய் எப்படி படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என விஜய் நடிக்கும் புதிய படம் வரட்டும், ஒரு கை பார்த்து விடுகிறேன் என சவாலுடன் காத்திருப்பதாக கூறப்படுகிறது.