காக்க வைத்து கழட்டிவிட்ட கைவிட்ட விஜய்.. கை கொடுத்த தூக்கிவிட்ட சிவ கார்த்திகேயன்..

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். முதல் படமே சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்த முருகதாஸ், அடுத்து விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படத்தின் வெற்றியின் மூலம் டாப் இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தார், இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த துப்பாக்கி படத்தை இயக்கியவர் முருகதாஸ்.

நடிகர் விஜயின் சினிமா கேரியரில் துப்பாக்கி படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக தற்பொழுது வரை கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் கத்தி மற்றும் சர்கார் ஆகிய படங்களை இயக்கிய முருகதாஸ். ரஜினி நடிப்பில் வெளியான இயக்கிய தர்பார் படம் சரிவர போகவில்லை. இதனை தொடர்ந்து விஜய்க்கு பல ஹிட் படங்களை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் மீண்டும் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தை இயக்கி தன்னுடைய செல்வாக்கை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார்.

பலமுறை முருகதாஸிடம் கதை கேட்ட விஜய் காக்க வைத்து உறுதி செய்யாமலே இருந்துள்ளார். இருந்தும் விஜய் தனக்கு கால் சீட் கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த முருகதாஸுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி கால்ஷீட் கேட்டு வந்த முருகதாஸுக்கு எந்த ஒரு நடிகரும் கால்ஷீட் கொடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு ஓகே சொல்லியதால் விரைவில் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படத்தின் படப்பிடிப்பிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும் இது ஆக்சன் முழுக்க முழுக்க ஆக்சன் படம் எனக் கூறப்படும் நிலையில். தன்னுடைய முழு திறமையையும் இந்த படத்தில் முருகதாஸ் வெளிப்படுத்த இருப்பத இருக்கிறார்.

தன்னுடைய இயக்கத்தில் பல நடிகர்களுக்கு ஹிட் படம் கொடுத்திருந்தாலும் அவர்கள் மீண்டும் தன்னுடைய படத்தின் நடிக்க தயங்கியவர்கள், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க மறுத்ததற்கு வருத்தம் அடைய செய்யும் வகையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரமணா, துப்பாக்கி, தீனா போன்று அமையும் என்கின்ற நம்பிக்கையில் முருகதாஸ் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது