அஜித் ரசிகர் செய்த காரியம்.. செம்ம ஹேப்பியில் விஜய்… அஜித் ரசிகர்களுக்கு இது தேவையா.?

0
Follow on Google News

இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் நடிகர் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு படங்களும் நேரடியாக மோதியது. இதில் துணிவு படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் வாரிசு படம் ஒரு மெகா சீரியல் போல் இருப்பதால் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

இதனால் இந்த பொங்கல் பண்டிகையில் வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு இளைஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் கடும் எதிர்மறை விமர்சனத்திற்கு உள்ளான வாரிசு படம், குறிப்பாக பலரால் இது ஒரு மெகா சீரியல் போன்று உள்ளது என்று கிண்டல் செய்து வந்த நிலையில், அஜித் ரசிகர்கள் உச்சகட்டமாக வாரிசு படத்தை ட்ரோல் செய்து வந்தனர்.

குறிப்பாக இது மெகா சீரியல் போன்று உள்ளது என்ற ஒஎன ட்ரோல் செய்து வந்த நிலையில் இதுவே அந்த படத்திற்கு விளம்பரமாக மாறியுள்ளது. குறிப்பாக க சீரியலை விரும்பும் குடும்ப பெண்கள் இந்த பொங்கல் பண்டிகையின் போது மெகா சீரியல் போல் வாரிசு படம் இருக்கிறது என்கின்ற விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு குடும்பத்துடன் தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என குடும்பத்துடன் திரையரங்குகளில் குவிய தொடங்கி விட்டார்கள்.

இதனால் வாரிசு படம் தோல்வியின் விளிம்பில் இருந்து கொண்ட நிலையில் சீரியல் பார்க்கும் பெண்களின் ஆதரவினால் பெரும் சேதாரம் இன்றி தப்பித்துக் கொண்டது. இந்த நிலையில் வாரிசு படத்தை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்கிறோம் என்கின்ற பெயரில் குடும்பப் பெண்கள் மத்தியில் கொண்டு சென்று உள்ளதால் அந்த படம் தப்பித்துள்ளது.

மேலும் ஆரம்பத்தில் வாரிசு படம் மெகா சீரியல் போல் இருக்கிறது என்கின்ற விமர்சனத்தினால் கடும் சோகத்தில் இருந்த நடிகர் விஜய், தற்பொழுது அதுவே அந்த படத்திற்கு வெற்றி படியாக மாறிக் கொண்டிருப்பதை நினைத்து மிகப் பெரிய மகிழ்ச்சியில் நடிகர் விஜய் இருப்பதாக தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.