முதல் படத்திலே உலகை திரும்பி பார்க்க வைக்க விஜய் மகன் திட்டம்… தமிழகத்தில் எந்த இயக்குனரும் செய்யாத செயல்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழ்நாடு, கேரளா என தென்னிந்தியா முழுவதும் கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர். தளபதி படம் என்றாலே வசூலில் கோடிகளைக் குவிக்கும் என்பதாலேயே தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டு விஜய் படத்தைத் தயாரிப்பதற்கு காத்திருக்கின்றனர். அப்படி வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சயும் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கவுள்ளார்.

அதுவும் நடிகர் விஜய் அவரது முப்பது வருட சினிமா வாழ்க்கையில் செய்யாததை அவரது மகன் சஞ்சய் தன்னுடைய முதல் படத்திலேயே துணிச்சலுடன் செய்யப் போகிறார். இந்தத் தகவல் அனைவரிடமும் எதிர்பார்ப்பை அதிகப் படுத்தியுள்ளது. அரசியல் போலவே திரையுலகிலும் வாரிசுகளின் அறிமுகம் வழக்கமான ஒன்றாகிப் போனது.

அப்படி இருக்கையில், கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் விஜயின் மகன் சஞ்சய் நிச்சயமாக ஹீரோவாக அறிமுகமாவார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு அப்பா போல நடிகராக இல்லாமல், தன் தாத்தா சந்திர சேகரைப் போல சிறுவயதில் இருந்தே பெரிய இயக்குனராக வேண்டும் என்ற கனவும் ஆசையும் இருந்திருக்கிறது.

இதனாலேயே சஞ்சய் தனது பள்ளிப்படிப்பை முடித்ததும் அமேரிக்கா, கனடா, UK என வெளிநாடுகளில் மிகப்பெரிய யுனிவர்சிட்டிகளில் பிலிம் மேக்கிங் படிப்பை ஆர்வமாகக் கற்று வந்தார். ஒரு வழியாக பிலிம் மேக்கிங் படிப்பை முடித்த சஞ்சய் தனது முதல் படத்தை இயக்குவதற்காக தாயகம் நோக்கி வந்து அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஜேசன் சஞ்சயின் இயக்குனராக வேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்கு லைகா நிறுவனம் முதலீடு செய்யத் தயாராகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிவிட்டன.

முதல் படத்திலேயே மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்திருப்பதால் ஜேசன் சஞ்சய் மீதும் அவரது இயக்கத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் வலுத்து வருகின்றன. இப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இதையடுத்து இன்று வரை இந்த படத்தின் மற்ற தகவல்கள் ஏதும் வெளிவராத நிலையில், அண்மையில் வெளியான அப்டேட் குறித்து இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக, நடிகர் விஜயே இதுவரை செய்யத் துணியாத காரியத்தை அவரது மகன் தன்னுடைய முதல் படத்திலேயே செய்யத் துணிந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆமாங்க, நடிகர் விஜயின் மகன் சஞ்சய் முதல் படத்திற்காக கையில் எடுத்திருப்பது யுனிவர்சல் ஸ்டோரியாம்… எனவே, இந்தப் படத்தை சுமார் 10 மொழிகளில் எடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நடிகர் விஜய் கூட இதுவரை 10 மொழி படங்களில் நடிக்கவில்லை. புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பது போல, நடிகர் விஜயின் மகன் சஞ்சயின் துணிச்சலான முடிவு திரையுலகினரை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் வியக்க வைக்கிறது. நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் கங்குவா திரைப்படமும் 10 மொழிகளில் தயாராகிறது.

ஆனால் இதெல்லாம் ஆச்சரியம் அல்ல. ஏனெனில் நடிகர் சூர்யா 26 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வருகிறார். ஆனால், சஞ்சய்க்கு வயதே 23 தான் ஆகிறது. அப்படி இருக்கையில் இவ்வளவு பெரிய முடிவை எடுப்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும் இல்லையா?? இளம்கன்று பயமறியாது என்பதற்கு ஜேசன் சஞ்சய் ஒரு சிறந்த உதாரணம் தான்.

தனது முதல் படைப்பையே உலக அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்து வரும் சஞ்சய்க்கு ஏகப்பட்ட பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. மற்றொரு பக்கம் விஜய் ரசிகர்களும் ஜேசன் சஞ்சயின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து பாசிட்டிவ் கமெண்ட்களை வாரி இரைத்து வருகின்றனர். எது எப்படியோ? ஜேசன் சஞ்சயின் முயற்சி வீணாகாமல் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்ந்தால் நமக்கு கொண்டாட்டம் தானே…