அம்மா, அப்பாவுடன் விஜய் தீடிர் சந்திப்பு… மனைவி சங்கீதா உடன் அப்படி என்ன பிரச்சனை.?

0
Follow on Google News

கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார் விஜய். ஆரம்பத்தில் தனது அப்பா இயக்கி, தயாரித்த படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்து வந்த விஜய், பல தோல்விகளை கடந்து முன்னணிக்கு வந்தார். இதற்கெல்லாம் பெரிய பின்புலமாக இருந்தது விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் தான். அவர் மட்டும் இல்லாமல், விஜய்யின் அம்மா ஷோபாவும் அவரது வளர்ச்சிக்கு பக்கபலமாக நின்றார்.

அப்படியாக கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வளர்ந்த விஜய், தற்போது நம்பர் 1 இடத்திற்கு வந்துவிட்டார். விஜய்யின் படங்களுக்கு தான் நல்ல ஓபனிங் கிடைப்படதாகவும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குறைவைப்பதே இல்லையென்றும் தியேட்டர் உரிமையாளர்களால் சொல்லப்படுகிறது.
இதனிடையே கடந்த சில வருடங்களாக விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லையென செய்திகள் வெளியாகின.‌

விஜய் படங்களின் கதைகளை தேர்வு செய்வது, அரசியல் என்ட்ரி என பலவற்றிலும் எஸ்.ஏ சந்திரசேகர் தலையிடுவதாக சொல்லப்பட்டது. அதனால், தனது தந்தையென்றும் பார்க்காமல், விஜய் அவரிடம் பேசாமல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது லியோவில் நடித்து முடித்துவிட்ட விஜய், அடுத்து தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்துக்காக அமெரிக்கா சென்றிருந்தார் விஜய்.

அங்கு அவருக்கு மேக்கப் டெஸ்ட், பாடி ஸ்கேனிங் ஆகியவை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் அமெரிக்காவில் இருந்து நேற்று சென்னை திரும்பினார் விஜய். இந்த மாதம் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்காக வந்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் சென்னையில் இருக்கும் விஜய் அவரது தாய் ஷோபனாவையும், தந்தை சந்திரசேகரையும் சந்தித்துள்ளார்.

சந்திரசேகர் அண்மையில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டதையடுத்து, அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் “உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து” என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார் சந்திரசேகர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தங்களுக்குள் எந்தவிதமான சண்டையும் இல்லையென்பதை நிரூபிக்கும் விதமாக, தனது அப்பாவை நேரில் சந்தித்துள்ளார் விஜய்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் விஜய் தனது அப்பா, அம்மாவை சந்தித்துள்ளது, ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் பலரும் விஜய் தனது மகன் சஞ்சய்யை சந்தித்தாரா என கேட்டு வருகின்றனர். இயக்குநராக அறிமுகமாகவுள்ள சஞ்சய்க்கு, விஜய் இன்னும் வாழ்த்து சொல்லவில்லை என சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி சங்கீதா விஜய் விவாகரம் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்தன.

அதாவது சங்கீதாவுடன் விஜயின் மகன் சஞ்சய் மற்றும் விஜயின் மகள் திவ்யா இருப்பதாக கூறி வருகின்றனர். நடிகர் விஜய் தனியாக வாழ்ந்து வருவதாகவும் பல youtube சேனலில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சர்ச்சையில் விஜய் சிக்காமல் வெளியில் வரவேண்டும் என்றால் மனைவி, குழந்தைகளுடன் நின்று ஒரு புகைப்படம் எடுத்து கொண்டால் போதும் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தந்தையுடன் எடுத்த புகைப்படம் போல் அதுவும் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகின்றது.
மேலும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவானது தற்போது நடைபெற உள்ளது. தற்போது அந்த விழாவில் தளபதி விஜய் தனது மொத்த குடும்பத்துடன் கலந்து கொள்வாரா என்ற கேள்வியும் இருந்துள்ளது. விஜய்யின் கடந்த படமான வாரிசு படத்தில் அவரின் அப்பா அம்மா மட்டுமே கலந்து கொண்டனர், அவரின் மனைவி கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மனைவி கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது.