தொழிலில் கொடி கட்டி பறக்கும் நயன்தாரா.. இனி சினிமாவில் நடிச்ச என்ன .. நடிக்கலேனா என்ன.?

0
Follow on Google News

நடிகர், நடிகைகள் பலரும் பிசினஸ் தொடங்கி அதில் முதலீடு செய்வது வழக்கமான ஒன்றுதான். நடிகை சமந்தா ‘சகி’ என்ற ஆடை பிசினஸ், நடிகை காஜல் நகை தொழிலில் முதலீடு என நடிப்பைத் தாண்டியும் அதிலும் பிஸியாக வலம் வருகின்றனர். அந்த வகையில், நடிகை நயன்தாரா தனது கணவருடன் இணைந்து அழகு சாதன பொருள் விற்பனை தொழிலை தொடங்கியுள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

முதலில் தனது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தொடர்ந்து, சாய் வாலே என்ற டீ நிறுவனத்தில் முதலீடு செய்தார். அடுத்ததாக, கெமிக்கல் ப்ரீ லிப் பாமை தயாரித்து அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் துறைக்குள் நுழைந்தார். தி லிப் பாம் கம்பெனி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டன.

இந்நிலையில், ’9ஸ்கின்’ என்ற பெயரில் ஸ்கின் கேர் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை அவர் தொடங்கியிருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ளார்.
நயன்தாராவே சொல்கிறார் என்றால் அதை வாங்காமல் விட்டுவிடுவோமா என அவரின் ரசிகர்கள் பலரும் வரிசை கட்டி நிற்கும் நிலையில், `இந்தப் பயணம் செப்டம்பர் 29-ம் தேதியில் இருந்து தொடங்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் இன்ஸ்டா பதிவில், “ஆறு வருட அயராத முயற்சியையும், அன்பையும் வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உங்களைப் போலவே தனித்துவமான தயாரிப்புகளை மேம்படுத்துவதில் நாங்கள் எங்கள் இதயத்தைச் செலுத்தி உள்ளோம். நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை மற்றும் நவீன அறிவியலால் ஆதரிக்கப்படும் பார்முலாக்கள் உங்கள் செல்ஃப் கேரை மேம்படுத்தும். இந்த சுய காதல் பயணத்தில் எங்களுடன் இணைந்து ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்திற்கு ஹலோ சொல்லுங்கள்.

நாங்கள் @9SKINOfficial-ஐ அறிமுகப்படுத்துகிறோம். 9SKIN -ன் பயணம் செப்டம்பர் 29, 2023 அன்று தொடங்குகிறது. அற்புதமான தோல் பராமரிப்பு அனுபவத்திற்குத் தயாராகுங்கள். நாங்கள் அனைவரும் உங்கள் சருமத்தை சுய அன்பு மற்றும் சுத்தமான பொருள்களால் மாற்றுகிறோம். மேலும் விவரங்களுக்குக் காத்திருங்கள். சுய அன்பு தான் சிறந்த அழகு ரகசியம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். நயன்தாராவின் இந்தப் பதிவு தான் இப்போது இணையத்தில் வைரலாக உள்ளது.

மேலும், இப்படி வரிசையாக பிசினஸ் தொடங்கி வந்தால் அப்போ சினிமா அவ்வளவுதான என சில ரசிகர்கள் கேட்க, சினிமாவிலும் வழக்கம் போல நயன் கலக்குவார் என்கின்றனர் அவரது நெருங்கிய வட்டாரங்கள். நயன்தாராவின் புதிய அவதாரத்திற்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அவரது நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. திருமணமாகி குழந்தை வந்த பிறகும் சினிமாவும் மவுசு குறையாத ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார் நயன். இதுவரை கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த நயன்தாரா, ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். அப்படம் வெளியாகி தியேட்டரில் சக்கைப்போடு போட்டு வருவதோடு வசூலையும் வாரிக்குவிக்கிறது. இப்படி சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வரும் நயன்தாரா, பிசினஸிலும் செம்ம பிசியாக உள்ளார்.