சிறையில் ரவீந்திரன்… பின்னணி காரணம் மகாலக்ஷ்மி தானா… பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய பிரபலம்..

0
Follow on Google News

தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசனில் வனிதா குறித்த இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது. இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த ஆண்டு நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார்.

இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்களுடைய திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது. இவர்களது திருமண செய்தி வெளியானத்தில் இருந்தே சமூக வளைத்தளத்தில் கேலிக்கு உள்ளாகி இருந்தது. ஆனால், அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரவீந்தர் சந்திரசேகரன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தகவல் தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மோசடி ஆவணங்களை காண்பித்து 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இது குறித்து பலருமே விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது,

“தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் சொந்த காசில் இரண்டு, மூன்று படங்களை எடுத்தார் ஆனால் எந்த படமும் ஓடாததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது அதன் பிறகு யாருக்குமே தெரியாமல் பெரிய மோசடி செய்துள்ளார். இது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் ரவீந்திர சந்திரசேகர். பலகோடி மோசடி செய்துள்ளார்.

மோசடி குறித்து வந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரவீந்திரன் மோசடி செய்தது உண்மை என தெரியவந்தனை தொடர்ந்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர் தற்பொழுது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.” என்று பேசியுள்ளார். மேலும், “ரவீந்திர சந்திரசேகரன் மனைவி மகாலட்சுமி பெயருக்கு ஏற்றார் போல் உண்மையிலேயே மகாலட்சுமி மாதிரி இருப்பார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு சீரியல் நடித்து வந்தார். அப்பொழுதுதான் திருமணமான ஒருவரை திருமணம் செய்து அது பெரிய பஞ்சாயத்து ஆகி அதிலிருந்து மீண்டு வந்தார். இந்த நேரத்தில் தான் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரன் படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவ்வளவு அழகாக இருக்கும் மகாலட்சுமி ரவீந்தரை கல்யாணம் செய்து கொண்டது கண்டிப்பாக பணத்துக்காக தான் இருக்கும்” என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, திருமணமான ஒரே வருஷத்திலேயே கணவர் கம்பி என்கின்றார் .வீட்டுக்கு மகாலட்சுமி மருமகளாக வந்து இருக்காளே என்று நினைச்சா ஒரு வருஷத்திலேயே புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா என்று அவரது குடும்பத்தினர் புலம்பி வருவதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தற்போது ரவீந்தர் புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் பல பேரை கிழித்து தொங்கவிட்ட ரவீந்தர் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணுவது கொஞ்சம் வருத்தத்துக்குரிய விஷயம் தான் என்றும் பயில்வான் பேசி இருக்கிறார்.