இப்பாவது சூர்யாவுக்கு நன்றி உணர்வு வந்ததே… ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கலாமா.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல திரைப்படங்கள் நடித்து சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆரம்ப கட்டத்தில் ஒரு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் சூர்யா, அந்த காலகட்டத்தில் நந்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு ஒரு தனி அங்கீகாரத்தை பெற்று கொடுத்தவர் இயக்குனர் பாலா.

இதனை தொடர்ந்து இயக்குனர் கௌதமேனனன் இயக்கத்தில் காக்க காக்க படத்தின் மூலம் ஒரு ஆக்சன் ஹீரோவாக உயர்ந்தவர், தொடர்ந்து ஹரி இயக்கத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து சூர்யா டாப் நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார். சினிமாவில் மிகப்பெரிய உச்சத்திற்கு சூர்யா சென்றதில் முக்கிய காரணமாக இருந்தவர்களில் பாலா, கௌதம் மேனன், ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த மூன்று இயக்குனர்களும் சமீப காலமாக தொடர் சரிவை சந்தித்து மீண்டும் ஒரு ஹிட் படம் கொடுக்க முயற்சி செய்து வருகிறார்கள்,அந்த வகையில் இந்த மூன்று இயக்குனர்களுமே சூர்யாவை சந்தித்து பல கதைகள் சொல்லி கால்ஷீட் கேட்டு காத்திருக்கிறார்கள். இயக்குனர் ஹரி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான யானை படத்தில் முதலில் சூர்யா நடிகர் இருந்தது, ஆனால் ஹரி – சூர்யா இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் இந்த படம் கைவிடப்பட்டது.

அதேபோன்று இயக்குனர் கௌதம் வாசுதேவன் நீண்ட நாட்களாக சூர்யா கால் சீட்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வனங்கான் படம் பாதி எடுக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படம் பாதியிலே கைவிடப்பட்டுள்ளது. இதனால் இயக்குனர் பாலாவின் சினிமா எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

பாலா மற்றும் சூர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும், சூர்யா சில இடங்களில் விட்டுக் கொடுத்துப் போய் இருந்தால் வணங்கான் படம் பிரச்சனை சுமூகமாக முடிந்திருக்கும் என்கிறது சினிமா வட்டாரங்கள். தொடர்ந்து தன்னை வளர்த்து விட்ட இயக்குனர்களுக்கு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க எந்த வகையில் உதவி செய்ய மனம் இல்லாத சூர்யா என விமர்சனம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்பொழுது கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து இருப்பதாக தகவல் வழியாக உள்ள நிலையில் தன்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த கௌதம் மேனனுக்கு இப்பவாவது நடிகர் சூர்யா நன்றி உணர்வு வந்து உதவி செய்ய வந்துள்ளார் என்கிற பேச்சு சினிமா வட்டாரத்தில் உள்ளது.