அந்தர் பல்டி அடித்து அசிங்கப்பட்ட கமல்ஹாசன்….கழுவி கழுவி ஊத்தப்படும் பரிதாபம்.. என்ன பொழப்பு சார் இது.?

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், நான் படம் நடிக்கும் போது அது ரொம்ப கஷ்டமமாக இருந்தது, எனக்கு வியர்வை வந்தது, இடுப்பு வலித்ததுஎன்று. இதெல்லாம் ஆடியன்ஸிடம் சொல்ல முடியாது. அவர்கள் படத்தை பார்க்கும் பொழுது எனக்கு கால் உடைந்து இருந்தாலும், பரவாயில்லை இவர் நன்றாக நடனம் ஆடுகிறார் என்று அவர்கள் பார்ப்பது தான் முக்கியம்,அதுதான் அவர்களின் வேலை.

எனக்கு காலில் அடிபட்டுள்ளது என்று, கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக்காரர்கள் போன்று, எனது காயத்தை காட்டி காசு வாங்க மாட்டேன், என் திறமையை காட்டி காசு வாங்க வேண்டும் என கமல்ஹாசன் பேசியிருந்தார். இந்த வீடியோவை சுட்டி காட்டி, பிரபல சினிமா திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். நடிகர் பார்த்திபனை கிண்டல் செய்துள்ளார்.

கஷ்டப்பட்டு உழைத்து ரசிகர்களுக்கு மொக்கைப்படம் தருவதை விட. இஷ்டப்பட்டு வேலை செய்து நல்ல படம் தாருங்கள். இது World’s 1st, கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்டேன், 24 Hrs தூங்கவில்லை என்று அனுதாபம் தேடும் அறிவுஜீவிகளுக்கு சிறப்பாக பொருந்தும். என நடிகர் பார்த்திபன் தனது படைப்பில் வெளியான இரவின் நிழல் படத்தின் ப்ரோமோஷன் காக இரவு தூங்காமல் அழைந்து கொண்டிருக்கிறேன்.

இது உலகில் நம்பர் 1 சிங்கிள் ஷாட் படம் என்று விளம்பரம் செய்ததை கிண்டல் செய்யும் விதத்தில் பதிவு செய்துள்ளார். இரவின் நிழல் படம் பல தரப்பினர் மத்தியில் மிகுந்த பாராட்டை பெற்று வந்த நிலையில்,ப்ளூ சட்டை மாறன், இந்த படத்தை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் பார்த்திபன் மற்றும் ப்ளூ சட்டை மாறன் இடையே கடும் மோதல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் கமல்ஹாசன், எனது கலீல் அடிபட்டுள்ளது என்று, தனக்கு ஏற்பட்ட காயங்களை காட்டி நான் பிச்சை எடுக்க மாட்டேன் என பேசியதற்கு,பதிலடியாக, சில வாரங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் பேசிய மற்றொரு வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது. அதில் நெறியாளர் நீங்க டான்ஸ் ஆடும் போது எந்த பாடலுக்கு டான்ஸ் ஆடுவது கடினமாக இருந்தது என கேள்வி எழுப்பினர்.

அதற்கு, எல்லாமே எனக்கு கஷ்டம் தான், பத்தல பத்தல பாடல் ஒன்றும் ஈசி கிடையாது, என்னுடைய காலில் ராடு வைத்திருந்தார்கள், இந்த காலில் மட்டும் சுமார் இரண்டு அலல்து மூன்று தடவை அறுவை சிகிச்சை நடந்தது என விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது பேசிய வீடியோ தற்பொழுது வைரலாகி. தனது காயத்தை சொல்லி படத்தை ப்ரோமோஷன் செய்து விட்டு, தற்பொழுது அந்தர் பல்டி அடித்துள்ளார் கமல்ஹாசன் என கழுவி கழுவி ஊத்துகிறார்கள் நெட்டிசன்கள்.

தேவயானி, ரம்பாவை தூக்கிய அன்புச்செழியன்… வாங்கிய பணத்திற்கு என்ன செய்தார் தெரியுமா.?