நீயெல்லாம் ஒரு நடிகரா… லெஜெண்ட் சரவணன் அசிங்கப்பட்டு திருப்பிய பரிதாபம்.. எங்கே தெரியுமா.?

0
Follow on Google News

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் சொந்த தயாரிப்பில் அவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான படம் லெஜன்ட். சரவணா ஸ்டோர்ஸ் கடை விளம்பர படங்களில் நடித்து வந்த லெஜெண்ட் சரவணன் சினிமா மீது கொண்ட ஆசையினால் நடிகராக அவதாரம் எடுத்தார். ஒரு மனிதன் தான் ஆசைப்பட்ட ஒரு செயலில் ஈடுபடுவதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

ஆனால் அந்த செயலில் ஈடுபடும் முன்பு தனக்கான தகுதியை அந்த மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுபோன்று நடிப்பிற்கு சற்றும் சம்பந்தமே இல்லாத லெஜெண்ட் சரவணன் சினிமாவில் கதாநாயகனாக உருவெடுத்தது, நீயெல்லாம் நடிக்க வேண்டும் என்று யார் அழுதா.? என படம் பார்த்தவர்கள் மிக கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர்.

லெஜண்ட் படத்திற்கு சென்று அதில் நடித்துள்ள லெஜெண்ட் சரவணன் ட்ரோல் செய்யலாம் என்று சென்றவர்கள் கூட, ட்ரோல் செய்யக்கூட லாயக்கு இல்லை என்கிற ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். இந்நிலையில் லெஜெண்ட் படத்தை தமிழ்நாட்டிலேயே பார்க்க ஆள் இல்லாத போது, தன்னை ஒரு பேன் இந்தியா ஸ்டார் போல் எண்ணிக்கொண்டு, லெஜன்ட் படம் பேன் இந்தியா படம் என மும்பை, கேரளா, ஆந்திரா என இந்தியா முழுவதும் ப்ரோமோஷன் செய்து வந்தார் லெஜெண்ட்.

ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் இந்த படத்தை வாங்க கூட ஆட்கள் இல்லை, குறிப்பாக வெளிநாடுகளில் பல நாடுகளில் லெஜெண்ட் படம் ஒரு திரையரங்குகளில் கூட வெளியாகவில்லை. இதற்கு காரணம், நீயெல்லாம் ஒரு நடிகரா.? உனக்கு பணம் இருக்கு, அதற்காக உன் ஆசையை நீ நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் உன் படத்தை நாங்கள் விலைக்கு வாங்கி நஷ்டம் பட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களின் மனஓட்டம் தான்.

லெஜெண்ட் படத்திற்கு படத்தை வாங்க மறுத்து விட்டனர். இந்நிலையில் தமிழில் லெஜன்ட் படத்தை பார்க்க ஆளில்லாத போது, தன்னை பான் இந்தியா ஸ்டார் என நினைத்து கொண்டு, பிறமொழியில் லெஜெண்ட் படத்தை ப்ரோமோஷன் செய்து, கடைசியில் படத்தை வாங்க பலர் முன்வராத நிலையில் அசிங்கப்பட்டு லெஜெண்ட் சரவணன்திரும்பியது தான் மிச்சம் என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

டெல்லியில் இருந்து இறங்கிய ஸ்பெஷல் டீம்… கடும் பீதியில் சிவகுமார் குடும்பம்… பினாமி சிக்கியது எப்படி.?