கடன் மேல் கடன்.. கை கொடுத்து தூக்கி விட்ட அஜித்… என்ன நடந்துச்சு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை விஜயசாந்தியின் மேக்கப் மேனாக இருந்தவர் எம் ரத்னம், ஆந்திராவில் தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜயசாந்தி தமிழ் படங்களில் அறிமுகமான போது, தெலுங்கில் உச்ச நடிகராக இருந்த என்டிஆர் போட்டியாக விஜயசாந்தி புகழ் பெற்றிருந்தார். அந்த அளவுக்கு தெலுங்கு சினிமா உலகில் அவர் நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட்டான அடித்திருந்தது.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர் விஜயசாந்தி, அப்பேர்ப்பட்ட முன்னணி நடிகையாக இருந்த விஜயசாந்திக்கு மேக்கப் மேனாக இருந்தவர் ஏ எம் ரத்னம். மேலும் ஏ எம் ரத்தினம் அவர்களுக்கு கதை அம்சம் குறித்த புரிதலும் இருந்தது, ஏனென்றால் மேக்கப் மேனாக தொடர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றி சினிமாவையே சுவாசித்ததின் காரணமாக சினிமா நுணுக்கங்களை கற்று தேர்ந்தவர்.

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ஏ.எம்.ரத்தினம், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை விஜய், அஜித் போன்ற நடிகர்களை வைத்து தயாரித்தார். தொடர்ந்து நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்த அவருடைய தயாரிப்பு நிறுவனம். திடீரென பெரும் நட்டத்தை ஏற்படுத்தி பெரும் கடலில் மூழ்கியது ஏ.எம்.ரத்தினத்துக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனம். இதில் இருந்து மீண்டு வர முடியாமல் பரிதவித்து கொண்டிருந்தார் ஏ.எம்.ரத்தினம்.

இந்த நிலையில் எப்படி மகாபாரதத்தில் திரௌபதி மானத்தை காக்க சேலையை கொடுத்து கிருஷ்ணான் உதவியது போன்று கடும் சிக்கலில் இருந்த ஏ.எம். ரத்தினத்தை காக்க கிருஷ்ணர் போல் உதவிசெய்தார் நடிகர் அஜித் குமார். எம் ரத்னம் தயாரிப்பில் அஜீத் 2 படங்கள் நடித்துக் கொடுத்து மீண்டும் எம் ரத்தினத்தை மீட்டெடுத்தார், இதனால் வாழ்க்கையின் அபாய கட்டத்தில் இருந்த எ.எம் ரத்தினம் நடிகர் அஜித்குமாரால் காப்பாற்றபட்டார்.

அப்போது இனிமேலாவது தயாரிப்பு தொழிலில் கவனமாக இருங்கள் என்ற அஜித் குமார் அறிவுரையை ஏற்று ஏ.எம். ரத்தினம், அதன் பின்பு சுதாரித்துக் கொண்டு தயாரிப்பு தொழிலை தாற்காலியமாக நிறுத்தி கொண்டவர், தற்போது கடன் தொல்லை இல்லாமல் சொந்த பங்களா, சொந்த கார் என நல்லபடியா வாழ்ந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.