மணிரத்தினம் ஒரு காலி பெருங்காய டப்பா … கழுவி கழுவி ஊத்தும் ரசிகர்கள்…

0
Follow on Google News

மணிரத்தினம் இயக்கத்தில் தற்பொழுது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. இந்த படத்தின் முதல் பாகத்திற்கு இருந்த ஓபனிங் இரண்டாம் பாகத்திற்கு இல்லை. பெரும்பாலான ஊர்களில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரையிடப்பட்ட திரையரங்குகளின் இருக்கைகள் காலியாகவே காட்சியளிக்கிறது. மேலும் வெளிநாடுகளில் பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்திற்கு எந்த ஒரு ரெஸ்பான்ஸ் இல்லை.

இதற்கு காரணம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை மிகுந்த எதிர்பார்ப்பில் சென்று மக்கள் பார்த்தார்கள். ஆனால் அந்த படத்தில் அடுத்து பொன்னின் செல்வன் 2 படத்தை பார்ப்பதற்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் ஏதும் அமையவில்லை. பாகுபலி 1 வெளியான போது கட்டப்பாவை பாகுபலி ஏன் கொன்றார் என்கின்ற ஒரு பரபரப்பு பாகுபலி 1 பார்த்தவர்கள் மத்தியில் இருந்தது அந்த எதிர்பார்ப்பா பாகுபலி 2 படத்தை பார்ப்பதற்கு தூண்டியது.

ஆனால் பொன்னியின் செல்வன் பாகம் 1 அது போன்று எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை, மேலும் தற்போது வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் பாகம் இரண்டில் பல காட்சிகள் லாஜிக்கே இல்லாமல் செல்கிறது அருண்மொழிவர்மன் மாறுவேடத்தில் யானை மீது வருகிறார், ஆனால் அவரை யாருமே கண்டுபிடிக்கவே முடியவில்லை போன்று அந்த காட்சி இருக்கிறது. அப்படி என்ன வித்தியாசமான மாறுவேடம் என்று கேட்டால் ஒன்றுமே இல்லை துணியால் முகத்தை மூடி இருக்கிறார். அப்படி மூடி இருந்தாலுமே ஜெயம் ரவி முகம் பளிச்சென்று அனைவருக்குமே தெரிகிறது.

அதேபோன்று மாந்தாகினி ஆக வரும் வயதான ஐஸ்வர்யா ராய் லாஜிக்கே இல்லாமல் எல்லா இடத்திலும் வருகிறார் அருள்மொழி அவர்களை காப்பாற்றுகிறார் பின்பு சோழ தேசத்திற்குள் இருக்கிறார். மேலும் பாதுகாப்பான பல அடுக்கு கொண்ட பாதுகாப்பான சுந்தர்ராஜ சோழன் இருக்கும் அரண்மனை உள்ளே எப்படி அந்த வயதான பாட்டி மட்டும் உள்ளே சென்றார் என்பது சற்றும் லாஜிக்கே இல்லை.

இந்த படத்தில் காமெடி என்கின்ற பெயரில் ஜெயராம் மற்றும் கார்த்திக் இருவரும் இடம் பெறும் காட்சிகள் சற்றும் வொர்க் அவுட் ஆகவில்லை. மேலும் இந்த படத்தில் எந்த ஒரு காட்சியும் ஆஹா ஓஹோ என்று பாராட்டும் வகையில் அமையவில்லை. அந்த வகையில் கல்கி எழுத எழுதிய பொன்னியின் செல்வனை சற்றும் ஆராயாமல் அந்தக் கதைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் சில மாற்றங்களை கொண்டு வந்து கதையின் எந்த ஒரு மெனக்கடலும் மணிரத்தினம் செய்யாவில்லை.

கல்கியின் பொன்னியின் செல்வனை அப்படியே காப்பி அடித்து வைத்துள்ளார் மணிரத்தினம் அந்த வகையில் பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்தவர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தில் மணிரத்தினம் காலி பெருங்காய டப்பா தான் என்றும், காலி பெருங்காயம் டப்பாவில் எப்படி வாசனை இருக்கும் ஆனால் பெருங்காயம் இருக்காது, அதுபோல மணிரத்தினத்திடம் இனி எந்த ஒரு சரக்கு இல்லை என்று ஏமாற்றத்தில் மணிரத்தினத்தை விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.