இந்த வயசுல உனக்கு பொம்பள சொக்கு கேக்குதா.? அதுக்காக தான நீ 1 லட்சம் செலவு செஞ்ச… பப்லுவை வெளுத்து விட்ட பயில்வான்..

0
Follow on Google News

பிரபல நடிகர் பப்லுஷீத்தல் என்கின்ற பெண்ணுடன் அவர் லிவிங் உறவில் இருந்து வந்தது அனைவரும் அறிந்ததே. இருவருக்கும் 30 வயது வித்தியாசம் இருக்கிறது. இவர்களுடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் இவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களுடைய வேலையை செய்திருந்தார்கள். இந்த சூழலில் அவரையும் சில தினங்களுக்கு முன்பாக பிரிந்து விட்டதாக தற்பொழுது தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த மக்கள் அமைதியாகிவிட்டார்கள். பப்லு பிருத்விராஜ் சமீபத்தில் தனது புதிய படத்தின் விளம்பரத்தின் ஒரு பகுதியாக பேட்டிகளை அளித்தார். ஆனால் விவாகரத்து குறித்த கேள்விகள் எழுந்தபோது பப்லு பிருத்விராஜ் அதைதவிர்த்தார்.

இவர்களது பிரிவு குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசி இருந்தார். ஷீதலை உடல் ரீதியாக திருப்திப்படுத்த இயலாமையே அவர்களது பிரிவுக்கான காரணம் என்று கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பப்லு, “ நான் ஒன்றல்ல 40 பெண்களை திருப்திப்படுத்த முடியும். ஆமாம் எனக்கு அது தேவை தான். அது எனக்கு காலை உணவு சாப்பிடுவது போல் தான். பயில்வானால் நடக்க கூட முடியாது என்றும், அப்படிப்பட்டவர் தேவையில்லாத விஷயங்களை கேமரா முன் கூச்சலிடுகிறார்” என்றார்.

இதனிடையே தற்போது பப்லுவின் கருத்துக்கு பயில்வான் ரங்கநாதன் பதிலளித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “பப்லுவைப் பற்றி பலர் பேசினர், ஆனால் அவர் நான் சொன்னதை மட்டும் குறிப்பிட்டு என்னை திட்டினார். என்னால் கண்ணியமாக நடக்க முடியாது என்று பப்லு கேலி செய்தார்.

இப்போது எனக்கு 72 வயதாகிறது, இந்த வயதிலும் நடப்பது பெரிய விஷயம், நீங்கள் ஒர்க் அவுட் செய்து பெரியவர். மற்றும் சிக்ஸ் பேக் உடல் வைத்து இருக்கிறார். வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இப்போது உங்களைப் பற்றி மேலும் கூறுகிறேன். பப்லு முதலில் தனது தோழியான பினாவை மணக்கிறார். பப்லு இயல்பிலேயே முன்கோபக்கர். அதனாலேயே அவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நிகழ்ந்து வந்தது.

ஒரு கட்டத்தில் அது விவாகரத்து வரை சென்றது. இந்த சூழலில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பீனாவை பிரிந்த பப்லு, ஒரு நிகழ்ச்சியில் தான் ஷீத்தலை சந்தித்து அவர் மீது காதல் வயப்பட்டு இருவரும் லிவிங் ரிலேஷனில் இருந்து வந்தனர். 57 வயதில் அந்த பெண்ணோடு அவர் வாழ்ந்து வந்தார், அந்த அளவிற்கு உனக்கு பெண் மோகம் கேட்கிறது, ஒரு முறை ஷீத்தலுக்காக ஒரு தனியார் ஹோட்டலில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து பெரிய ரூம் ஒன்றை புக் செய்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகர் பப்லு தன்னுடைய நடிப்பின் மீது குறை கூறுகிறார், 71 வயதில் நான் இன்றளவும் நன்றாகத்தான் நடித்த வருகிரேன் அதைப்பற்றி அவர் எனக்கு கற்றுத் தர தேவையில்லை என்று கூறியுள்ளார். 57 வயதில் உனக்கு பெண்கள் மீது மோகம் கேட்கிறதா? நீ எல்லாம் என்னை பற்றி பேசலாமா? கோவப்பட்டாலும் அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும், கோவப்பட்டவனுக்கு வேதனை தான் வந்து சேரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.