விவாகரத்து பெற்ற பிரபு மகள்… இரண்டாவது திருமணத்துக்கு மாப்பிளை ரெடி…

0
Follow on Google News

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு இளம் இயக்குனருடன் இரண்டாவது திருமணம் நடக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு வீட்டாரும் சம்மதித்து திருமணத்திற்கு தேதி குறித்துவிட்ட நிலையில், தற்போது பிரபு திருமணப் பணிகளில் தீவிரம் காட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகவே, யார் அந்த மாப்பிள்ளை என்று நெட்டிசன்கள் ஆவலுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் நடிகர் திலகம் சிவாஜியின் பேத்தியை இரண்டாவதாக கரம்பிடிக்கப்போகும் இளம் இயக்குனர் ஆவார். திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா மற்றும் மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கிய இவர், அடுத்ததாக நடிகர் அஜித்தை வைத்து படம் எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிய நிலையில், அடுத்த மாதம் பிரபுவின் மகளை மணம் முடிக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் பிரபு இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது, விளம்பரங்கள் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் பிரபுவிற்கு விக்ரம் பிரபு என்ற மகனும் ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். மகன் விக்ரம் பிரபு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு அவரின் உறவினர் குணால் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இந்த தம்பதியினர் அமெரிக்காவில் செட்டில் ஆகி ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பின்னர் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்துப் பெற்ற ஐஸ்வரியா, தற்போது அப்பா பிரபுவுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

அதையடுத்து ஐஸ்வர்யாவும் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச் சந்திரனும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இப்படியான நிலையில், இருவரின் காதலுக்கும் பச்சை கொடியை காட்டிய இரு வீட்டாரும் அடுத்த மாதம் 15 ஆம் தேதி கல்யாணத்தை நடத்த தேதி குறித்துள்ளனர். இந்தத் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.