பெரிய மனுஷனுக்காகத்தான் …. சிவகுமார் சொன்ன வார்த்தை காதிலே இருக்கு… அமீர் உருக்கமாக சொன்ன பதில்..

0
Follow on Google News

நடிகர் சூர்யா இன்று சினிமாவில் மிக பெரிய உயரத்துக்கு வந்திருக்கிறார் என்றால், அதற்கு ஒரே காரணம் இயக்குனர் பாலா என்பதை சூர்யாவே மறுக்க முடியாத உண்மை. பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் சூர்யாவை சினிமாவில் அடையாளப்படுத்தி அங்கீகாரம் பெற்று தந்தவர் பாலா, அதே போன்று சூர்யா தம்பி கார்த்திகை பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவில் அடையப்படுத்தியவர் இயக்குனர் அமீர்.

அந்த வகையில் இன்று கார்த்திக் பல கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மிக பெரிய உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் அமீர் தான், ஆனால் பருத்திவீரன் படத்திற்கு பின்பு இயக்குனர் அமீர், நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படம் கூட இயக்கவில்லை, பருத்தி வீரன் படம் தான் கார்த்தி – அமீர் கூட்டணியில் உருவான முதல் படமும் கடைசி படமும். மீண்டும் இவர்கள் இணைந்து படம் பண்ணாமல் இருப்பதற்கு காரணம் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரட்சனை தான் என பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளரும், சிவகுமார் குடும்ப உறவினருமான ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சமீபத்தில் பருத்திவீரன் படத்தின் இயக்குனர் அமீரை மிக கடுமையாக பேசி வருகிறார், பருத்தி வீரன் எனக்கு முதல் படம். ஆனால் நான் கொடுத்த காசை வைத்து படத்தை எடுக்காமல் பணத்தை திருடிவிட்டார் என ஞானவேல் ராஜா பேசி வருவது மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் அமீர் – ஞானவேல் ராஜா விவகாரம் குறித்து, பருத்திவீரன் படத்தில் பணியாற்றிய சமுத்திரக்கனி தெரிவித்துள்ள பல சம்பவங்கள், அமீர் மீது மிக பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது, அதில் இந்த பஞ்சாயத்தில், களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்கிறதத் தான் என்னால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல என தெரிவித்த சமுத்திரக்கனி.

பருத்தி வீரன் படம் எடுக்க , அமீர்‌ அண்ணனோட சொந்தக்காரங்க, நண்பர்கள்‌, இப்படி ஒவ்வொருத்தர்‌கிட்டயும்‌ அவர்‌ சொல்லச்சொல்ல போய்‌ ஒரு லட்சம்‌, ஐம்பதாயிரம்‌, ரெண்டு லட்சம்‌ இப்டி வாங்கிட்டு வந்தவன்‌ நான்‌. ஒருநாள் அமீர் அண்ணனோட நண்பர் ஒருத்தர் எதுக்கு இது அப்டியே உட்டுட வேண்டியது தானே நிறுத்துங்க படத்தை அப்படின்னு சொன்னாரு அதுக்கு அமீர் அண்ணன் என்ன சொன்னாரு தெரியுமா?

“ஆரம்பிச்சுட்டோம். கார்த்தியோட எதிர்காலம் இது. அதுமட்டும் இல்லாம பெரியவர் என் கைய புடிச்சிட்டு கார்த்தி கைய புடிச்சு என் கைல கொடுத்துட்டு சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் காதிலேயே இருக்கு நான் இவங்களுக்காக ஏதும் செய்யலிங்க அந்த பெரிய மனுஷனுக்காகத்தான் செய்றேன்..” அப்படின்னு சொல்லி செஞ்சார்.என பெரியவர் என கார்த்திக் தந்தை சிவகுமார் அமீர் கைய பிடுச்சுட்டு சொன்னதை தெரிவித்த சமுத்திரக்கனி.

மேலும் அன்னைக்கு அவரு படத்தை நிறுத்தி இருந்தா இந்த படம் வந்துருக்குமா..? ஒரு ஹீரோ வெளில வந்துருப்பாரா..? என்ன பேச்சு பேசுறீங்க?ஆனா அவ்வளவு தூரம் பெருந்தன்மையா நடந்துக்கிட்ட ஒரு மனுஷனைதான் எல்லாருமா சேர்ந்து..! இப்படி அம்பது அறுபது பேர்ட்ட வாங்குன பணத்துக்குத்தான் நீங்கெல்லாம் சேர்ந்து உக்காந்து கணக்கு கேட்டீங்க. எனக்கே தெரியல. எத்தனை பேர்ட்ட போய்ட்டு வாங்கிட்டு வந்தேன்னு..யார் யார் எவ்ளோ கொடுத்தாங்க-ன்னு சொன்ன வார்த்தையை காப்பாத்தணும்- னு பல பேர்கிட்ட கை ஏந்தி அந்த படத்தை முடிச்சாரு அமீர் அண்ணன். அதுக்கு ஆயிரம் கோடி இல்ல, லட்சம் கோடி கொடுத்தாக்கூட ஈடாகாதுங்க.

நீங்களெல்லாம் ஏதோ ஒண்ணரை கோடிக்கு கணக்கு கேட்டுட்டு இருக்கீங்க ஞானவேல்..! செலவு பண்ணது அதுக்கும் மேல… அதெல்லாம் பாவம்… கணக்கிலேயே இல்ல! அமீர் அண்ணனோட பணம் அது. இப்ப நான் சொல்லிருக்கிறது ஒரு சம்பவம் தான். இன்னும் நிறைய இருக்கு தேவைப்பட்டா நானும் பேச வேண்டி வரும். இந்தமாறி பொதுவெளில தப்பு தப்பா பேசுறத இதோட நிறுத்திக்கங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது” என சமுத்திரக்கனி எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் அமீர் கைய புடுச்சு அன்று சிவகுமார் சொன்ன வார்த்தைக்காக பல சிரமங்களை சந்தித்து கார்த்தியை ஒரு நடிகராக அடையாளப்படுத்திய அமீரை, சிவகுமார் குடும்ப உறுப்பினர் ஞானவேல் ராஜா இழிவாக பேசலாமா என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது குறித்து சிவகுமார், கார்த்திக், சூர்யா என யாராவது வாய் திறந்து பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது.